ஆண்மையைப் பெருக்கும் முருங்கை விதைகள்

Date:

Share post:

ஆண்மையைப் பெருக்கும் முருங்கை விதைகள்

விந்தணுக்களை பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை விதைகளுக்கு உள்ளது. அதன் மருத்துவ குணத்தைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

முருங்கை விதையை சாப்பிட்டால் உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து பல்வேறு வியாதிகளை நெருங்க விடாமல் தடுக்கும் குணம் உண்டாகும். உடலில் தேவையில்லாமல் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைத்து இதயத்துக்கு வலு சேர்க்கும்.

உயிரைக் கொல்லக் கூடிய புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு.

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் எனப்படும் 48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும்.

விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும். குழந்தைப்பேறு உண்டாகும்.

முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்ப்பதுண்டு.

பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து கெட்டிப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலத்தை தரும். பெண்கள் சாப்பிட்டால் ரத்த சோகையை நீக்கி உடலை புத்துணர்ச்சியாக்கும்.

இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்

முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

முருங்கை விதைகள் மற்றும் முருங்கைக்காய்களை துண்டுதுண்டாக்கி சூப் செய்து சாப்பிட்டால் சிறப்பாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வலுவாக மாறுவதற்கும் உதவியாக இருக்கும்.

ஆண்மையைப் பெருக்கும் முருங்கை விதைகள்

இதயத்தைப் பலப்படுத்தும். நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கும். மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும்

முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும். செல் சிதைவை தடுக்கிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

முருங்கை விதைகள் மற்றும் முருங்கைக்காய்களை துண்டுதுண்டாக்கி சூப் செய்து சாப்பிட்டால் சிறப்பாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு வலுவாக மாறுவதற்கும் உதவியாக இருக்கும்.

ஆண்மையைப் பெருக்கும் முருங்கை விதைகள்

எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க உடலில் கொலஸ்ட்ரால் அபாய கட்டத்தை தாண்டிருச்சாம்!

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...