காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

Date:

Share post:

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சீரியல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல்.

இந்த சீரியலுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் வந்ததற்கு அந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவின் நடிப்பும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

குணசேகரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட ஜனனி வீட்டில் உள்ளவர்களிடம் அவரைப்பற்றி சொல்கிறாள்.

இதனையடுத்து அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகிறார்கள். இதனிடையே அப்பாத்தாவின் 40 சதவீத பிரச்சினை பூதாகாரமாக வெடித்து இருக்கிறது.

எப்படியும் தன்னிடம் இருந்து ஜீவானந்தம் கைப்பற்றிய அப்பத்தாவின் சொத்துக்களை மீட்டு ஆக வேண்டும் என்று குணசேகரன் கங்கணம் கட்டிக்கொண்டு அலைய, ஜீவானந்ததை கொலை செய்யும் அளவிற்கு துணிந்தார்.

அதில் அவர் தப்பினாலும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். இப்படி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் நேற்று கதிர் எதிர்பார்த்ததிற்கு மாறாக குணசேகரன் பக்கம் சாய்ந்து விட்டார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகி இருக்கிறது. அதில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஜனனி இவங்கதான் ஜீவானந்தம் மனைவியை கொன்று இருப்பார்கள் என்று சொல்ல நந்தினி ஆமாம் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என்று சொல்கிறாள்.

இதனிடையே அப்பத்தா காணமால போனது குறித்து பேசிய குணசேகரன், வீட்டில் இத்தனை பேர் இருக்கிறோம் எப்படி அந்தக்கிழவி காணமால் போனார் என்ற கத்த, எதிர்குரலாய் ரேணுகா உங்கள் தம்பியையும்தான் காணோம் என்று கேட்க

சுற்றி இருப்பவர்கள் என்ன செய்தீர்கள் அப்பத்தாவை என்று வளைத்து வளைத்து கேட்க குணசேகரன் முறைத்துக்கொண்டு நிற்கிறார்.

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற…வழிபடும் முறை

வரலட்சுமி விரதம் தேவியின் அருள் பெற...வழிபடும் முறை தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ஆவணி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கேட்ட வரங்கள்...