சாப்பிட்ட உடனே மேல் வயிறு வலிச்சா என்ன காரணம்?

Date:

Share post:

சாப்பிட்ட உடனே மேல் வயிறு வலிச்சா என்ன காரணம்

சாப்பிட்ட உடனே மேல் வயிறு வலிச்சா என்ன காரணம்? சாப்பிட்டு முடித்த உடன் வயிறு வலிக்கு காரணங்கள் பல உண்டு.

அஜீரணம், அதிகப்படியான உணவு, உணவு சகிப்புத்தன்மை, பித்தப்பை கற்கள் போன்றவை பொதுவான காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து சற்று விளக்கமாக பார்க்கலாம்.

வயிற்று வலி குறிப்பாக உணவுக்கு பிந்தைய வலி என்பது அசெளகரியமானது. இது விலா எலும்பு வரை அசெளகரியம் உண்டு செய்யலாம்.

பெருபாலும் இது கவலைப்பட வேண்டியது இல்லை என்றாலும் வயிறு அடிக்கடி வலிக்கிறது என்றால் அது செரிமான கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.

கடுமையான வலியாக இருந்தால் உடனடி சிகிச்சை அவசியம். உணவுக்கு பிந்தைய வயிறு வலிக்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்க்கலாம்.

அஜீரணக்கோளாறு மேல் வயிற்றின் நடுவில் ஏற்படும் வலிக்கு காரணம். இது எபிகேஸ்ட்ரிக் வலி அல்லது டிஸ்ஸ்பெசியா என்று அழைக்கப்படுகிறது.

சாப்பிட்ட உடன் நிரம்பிய உணர்வு, வீக்கம், குமட்டல் போன்றவை உண்டு செய்யலாம்.

அஜீரணம் நாள்பட்டதாக இருந்தால் குறிப்பிட்ட காரணம் கண்டறியப்படவில்லை என்றால் அது செயல்பாட்டு டிஸ்ஸ்பெசியா என்று அழைக்கப்படுகிறது.

இது செரிமான பாதை சீராக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது.

சாப்பிட்ட பிறகு சிக்கல்களை உண்டாக்ககூடிய வயிற்று வலிக்கு காரணம் இரைப்பை கோளாறாக இருக்கலாம். எனினும் இது பரிசோதனைக்கு பிறகு உறுதி செய்யப்படுகிறது.

பொதுவாக வயிற்றுப்பகுதி ஆனது 1 அல்லது 2 கப் உணவை மட்டுமே வைத்திருக்க முடியும். இதை அதிகரிக்கும் போது சிக்கல் உண்டாகிறது.

கூடுதலாக உணவு எடுக்கும் போது உணவை நீட்டிக்க வேண்டும். அப்போது வயிறு அசெளகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

உணவை சரியான அளவு எடுக்க வேண்டும். ஒரு வேளை உணவு செரிமானம் ஆன பிறகே அடுத்த வேளை உணவுக்கு செல்ல வேண்டும்.

சாப்பிடும் போது கவனச்சிதறல் இருக்க கூடாது.

சாப்பாட்டை உமிழ்நீரோடு கலந்து மென்று விழுங்க வேண்டும். ஆனால் வேகமாக சாப்பிடுவது அதிகமாக சாப்பிடுவது போன்றே காற்றை விழுங்க செய்து வீக்கம் மற்றும் வாயுவை உண்டு செய்யும்.

ஒவ்வொரு கவளம் வாயில் வைக்கும் போது உணவின் சுவையை அறிந்து மென்று விழுங்கிய பிறகு அடுத்த கவளம் சாப்பிட வேண்டும்.

உணவில் உள்ள குறிப்பிட்ட மூலப்பொருளை உடல் ஜீரணிக்க இயலாமை உணவு சகிப்புத்தன்மை ஆகும்.

உதாரனத்துக்கு லாக்டேஸ் என்ற நொதியின் பற்றாக்குறை லாக்டோஸ் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

பால் பொருள்களின் சிக்கல்களை உண்டு செய்கிறது. இதை குறைவாக எடுப்பது வயிற்று வலியை தடுக்கும்.

உணவு ஒவ்வாமை என்பது சில உணவுகள் அல்லது பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது அசாதாரணமான நோயெதிர்ப்பு சக்தியை உண்டு செய்யலாம்.

சமயங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். முட்டை, பால், வேர்க்கடலை, மட்டி, கோதுமை போன்றவை ஒவ்வாமை.

இதன் மூலம் உணவு சகிப்புத்தன்மை மற்றும் ஒவ்வாமை என கவனித்து மருத்துவரிடம் வரலாறு கூறுவது சிகிச்சைக்கு எளிதாக இருக்கும்.

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என்பது உங்கள் வயிற்றில் இருந்து மீண்டும் உணவுக்குழாய் வாய்க்கு செல்லும் குழாய்வரை அமிலம் பாயும் சுகாதார நிலை.

இது உணவுக்குழாயில் எரிச்சல், விழுங்கும் போது வலி தொண்டையில் செரிக்கப்படாத அமிலம் அல்லது செரிக்கப்படாத உணவை சுவைத்தல் போன்ற அறிகுறிகளை உண்டு செய்யலாம்.

இந்நிலை இருந்தால் அமிலம் உணவுக்குழாயை சேதப்படுத்தும். இந்நிலைக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Irritable Bowel Syndrome என்னும் குடல் நோய்க்குறி சுகாதார நிலை.

இதில் வயிற்று வலி பொதுவானது. இது மூன்று நிலையில் வயிற்று அசெளகரியத்தை உண்டு செய்யும்.

பெரும்பாலும் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசெளகரியம், பெரும்பாலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஏற்படும் அசெளகரியத்துடன் தளர்வான மலம் மற்றும் மலச்சிக்கல் என மாறுபடலாம்.

இது வீக்கம், எரியும், தசைப்பிடிப்பு, முழுமை அல்லது கூர்மையான வலியை உண்டு செய்யலாம்.

நடுத்தர மற்றும் வயிற்றின் மேல் கீழ் பகுதிகளில் இந்த Irritable Bowel Syndrome வலி உண்டாகலாம். இது வயிற்றின் மேல் உடல் பகுதிகளிலும் பரவக்கூடும்.

பித்தப்பை அல்லது பித்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்பு, அசாதாரண பித்தப்பை செயல்பாடு அல்லது பிற காரணங்களால் இந்த படிவுகள் உண்டாகலாம்.

பித்தப்பை கற்கள் சில சமயங்களில் வலியை ஏற்படுத்தும். உணவு பெரியதாகவோ அல்லது கொழுப்பு அதிகமாகவோ இருந்தால் இந்நிலை உண்டாகலாம்.

சிலருக்கு வெறும் வயிற்றில் பித்தப்பை வலி இருக்கலாம். சில நேரங்களில் பிலியரி கோலிக் என்று அழைக்கப்படுகிறது.

இதை சரிபார்ப்பது அவசியம். பித்தப்பை வீக்க்மடைந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

சாப்பிட்ட உடன் அடிவயிற்றின் மேல் பகுதியில் தொடங்கி பின்பக்கம் வரை பரவுகிறது. அப்போது குமட்டல் மற்றும் வாந்தியும் இருக்கலாம்.

இதன் அறிகுறிகளில் ஒன்று சாப்பிட்ட பிறகு வயிற்று வலிக்கானது ஆகும்.

நேஷனல் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் நீரிழிவு மற்றும் செரிமானம் மற்றும் சிறுநீரக நோய்களின் படி, கணைய அழற்சி உள்ளவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் வலியுடன் வாந்தி, குமட்டல் உணர்வு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி தேவை.

குடலின் முதல் பகுதியான வயிறு அல்லது டூடெனினத்தின் புறணியில் ஏற்படும் புண்கள்.

வயிறு காலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த புண்கள் உங்கள் மார்பக எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையில் வலியை உண்டு செய்யும்.

சாப்பிட்ட பிறகு வலி என்பது பொதுவாக இரைப்பை புண் அல்லது வயிற்றில் இருக்கும் புண் என்று பொருள்படும். வயிற்றுப்புண்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அது குடலில் சில புற்றுநோய்களை உண்டு செய்யும் ஆபத்து உண்டு.

உணவுக்கு பிறகு வயிறு வலி என்பது காற்றை விழுங்கும் போது விரைவாக சாப்பிடுவதால் வலி உண்டாகலாம். இது ஏரோபேஜி என்று அழைக்கப்படுகிறது.

சாப்பிடும் போது பேசுவது அல்லது சாப்பிட்ட பிறகு சூயிங்கம் மெல்வது காரணமாக இருக்கலாம்.

மலச்சிக்கல்- நார்ச்சத்து இல்லாத உணவுகளால் இவை உண்டாகலாம்.

குடல் இஸ்கெமியா அல்லது சிறுகுடலுக்கு இரத்த விநியோகத்தில் சிக்கல் இருக்கலாம்.

சாப்பிட்ட பிறகு வயிறு வலி தொடர்ந்து கவனித்தால் மருத்துவரை உடனே சந்திப்பது நல்லது.

சாப்பிட்ட உடனே மேல் வயிறு வலிச்சா என்ன காரணம்?

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...