நாக பஞ்சமியால் 5 ராசிக்கு பூட்டியிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

Date:

Share post:

நாக பஞ்சமியால் 5 ராசிக்கு பூட்டியிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர். ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன. திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்லபஞ்சமி திதியான இன்று நாக பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
மறுநாள் கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமியானது ஆவணி மாத சுக்ல பட்க்ஷத்தின் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் நாக தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். இப்படி வழிபடுவதால் நாக தோஷம் நீங்குவதோடு, ராகு கேது தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 21 ஆம் தேதி, அதாவது இன்று கொணடாடப்படுகிறது. அதுவும் திங்கட்கிழமைகளில் இந்த நாக பஞ்சமி வந்திருப்பது இன்னமும் சிறப்பு வாய்ந்தது.

அதோடு, இந்த ஆண்டின் நாக பஞ்சமி நாளில் மிகவும் மங்களகரமான சுக்ல யோகம் உருவாகியுள்ளது.

இந்த சுக்ல யோகத்தால் நாக தேவதைகளுடன், சிவனையும் வழிபட்டால், சிலபெருமானின் பரிபூர்ண அருளி கிடைக்கும். அதோடு, இந்த யோகமானது சிவனின் அருளால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் புதிய காரியங்களை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

இக்காலத்தில் எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்துடன், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் சிறப்பாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்படும். எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்கள் சிவனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நிறைய நேரத்தை செலவிடும் வகையில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம்.

நாக பஞ்சமியால் 5 ராசிக்கு பூட்டியிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...