வடிவேலுவுக்கு தேசிய விருது நிச்சயம்
பரியேறும் பெருமாள், கர்ணன் என அடுத்தடுத்து சமூக கருத்துக்களை கொண்ட வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படமான மாமன்னன் வெளியானது.
வடிவேலுவுக்கு தேசிய விருது நிச்சயம் – திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மிகவும் எதிர்பாக்கப்பட்டு காத்திருந்த மாமன்னன் வெளியானது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கல்யாண் திரையரங்கில் மாமன்னன் படம் வெளியானது.
பொதுமக்கள் அனைவரும் மாமன்னன் படத்தை பார்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இப்படம் சமூக மாற்றத்திற்கு ஒரு சிறந்த படமாக விளங்குவதாகவும், அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இந்த திரைப்படம் வலியுறுத்தி வருகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், நடிகர் வடிவேல் நடித்த படங்களிலேயே ஒரு சிறந்த அங்கீகாரத்தை இப்படம் அவருக்கு கொடுத்துள்ளதாகவும் வடிவேலுவை இந்த கதாபாத்திரத்தில் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை இப்படத்திற்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளதாகவும்,
வடிவேலுவின் நடிப்பை பாராட்டி நிச்சயம் இந்த கதாபாத்திற்கு தேசிய விருது தர வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
===============================================
ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!
ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!
மக்களே உஷார்… உடனே ஆதார் – பான் எண்ணை இணையுங்கள்… இன்றே கடைசி நாள்…!
ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் அவகாசம் நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாருடன் பான் கார்டை இணைக்காத பட்சத்தில் நாளை முதல் பான் கார்டு எண் செயல்படாது. மேலும், செயல்படாத பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
டிடிஎஸ் பிடித்தம் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கப்படும். வங்கி ஆவணங்களுக்கு பான் எண் அத்தியாவசியம் என்பதால், வங்கிக் கணக்கை திறக்கவும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும், புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளிநாடு பயணம் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.