ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம்

Date:

Share post:

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம்

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம்… குவியும் வாழ்த்து…

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இயக்குநர் மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் ஆஸ்கர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனது தனித்துவமான படைப்பாற்றலின் மூலம் இந்திய சினிமாவில் தனெக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் மணிரத்தினம்,

இவர் இயக்கும் படத்தில் நடிப்பதை தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாய் கருதும் நடிகர், நடிகைகள், சினிமா வாழ்க்கையில் ஒரு முறையாவது மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்மடிருப்பார்கள்.

இப்படிப்பட்ட ஜாம்பவானின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கான பணிகளில் மணிரத்னம் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில்  திரையுலகின் உட்சபட்ச விருதாக கருதப்படும்  ஆஸ்கார் விருது அமைப்பின் உறுப்பினராக இயக்குனர் மணிரத்னம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்கர் விருதுகளை குவித்து சாதனை படைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

மேலும், ஆஸ்கர் குழுவிற்கு வரவேற்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்கர் குழுவில் ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது . தற்போது இயக்குனர் மணிரத்னமும் ஆஸ்கர் உறுப்பினர் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

===============================================

ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!

ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.

2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இன்றுடன் அவகாசம் நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாருடன் பான் கார்டை இணைக்காத பட்சத்தில் நாளை முதல் பான் கார்டு எண் செயல்படாது. மேலும், செயல்படாத பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

டிடிஎஸ் பிடித்தம் மற்றும் டிசிஎஸ் ஆகியவற்றின் விகிதம் அதிகரிக்கப்படும். வங்கி ஆவணங்களுக்கு பான் எண் அத்தியாவசியம் என்பதால், வங்கிக் கணக்கை திறக்கவும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், புதிய கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பெற முடியாது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பான் கார்டு கட்டாயம் என்பதால் வெளிநாடு பயணம் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...