வாழ்க்கைல பணம் பிரச்னையே இல்லன்னா நீங்க என்ன செய்வீங்க?
What would you do if money was not a problem in life?
உங்கள் வாழ்வில் இனி பணத்தேவையே இருக்காது என்ற நிலை மாறினால், நீங்க என்ன செய்வீர்கள்?
பணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியம்! கிட்டத்தட்ட நாம் செய்யும் எல்லா வேலைகளும் பணம் சம்பாதிக்கும் தேவையை மையமாக கொண்டதாக தான் இருக்கும்.
ஆனால், பணம் என்பது பொருட்டே இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்றால் எப்படி இருக்கும்?
நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பது பற்றிய கேள்விக்கு நெட்டிசன்கள் ரகளையாக பதில் அளித்துள்ளனர். அதுகுறித்த சுவாரஸ்ய விவரங்களை பார்க்கலாம்.
பணம் பற்றிய கவலை இல்லாமல் போனால், பலரும் மனதை உருக வைக்கும், நெகிழ வைக்கும் பதிலைத் தான் கூறியிருக்கிறார்கள்.
சாலையோர விலங்குகளுக்கு உறைவிடம், சக மனிதர்களுக்கு தங்கள் வாழ்க்கையை மாற்றி அவர்கள் விரும்பியபடி வாழ வைக்கும் உதவி, கனவுகளை அடையும் விருப்பம் என்று சுவாரஸ்யமான பதில்களை நெட்டிசன்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஒரு ட்வீட் மக்களின் ஆழ் மனதில் மறைந்திருக்கும் ஆசைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
பலரும் ரசனையாக, ரகளையாக பதில் கூறினாலும், ஒரு சிலர் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ, அதையே செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் போது, உலகில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு பணத்தேவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
பலரும் தங்களின் கனவுகளை அடைய தடையாக இருக்கிறது.
படிப்பு முதல் வேலை வரை பிடித்த விஷயங்களை செய்ய பணத்தேவை எவ்வளவு தடையாக இருக்கிறது என்பது மக்கள் அளித்த பதில்களில் மூலம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
சரி, உங்களுக்கு அப்படி ஒரு சூழல் அமைந்தால், உங்கள் வாழ்வில் இனி பணத்தேவையே இருக்காது என்ற நிலை மாறினால், நீங்க என்ன செய்வீர்கள்?.