மாமன்னன் அதன் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது – மாரி செல்வராஜ்
Mamannan has fulfilled its purpose – Mari Selvaraj
மாமன்னன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு மாரி செல்வராஜ் பேட்டியளித்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் வடிவேலு முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.
ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தேவர் மகன் தொடர்பாக மாரி செல்வராஜ் தொடர்பாக மாரி செல்வராஜ் பேசியது கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் மாமன்னன் படம் பார்க்க திரையரங்குக்கு வந்த மாரி செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”மக்கள் இந்தப் படம் தொடர்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்காங்க. நிச்சயம் இது மிக முக்கியமான படமாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் இது தன்னுடைய கடைசி படம்னு சொல்லிருக்காரு. அவருக்கு இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படம் அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யும் மக்களை வெல்லும். படம் பார்த்துட்டு பேசலாம்” என்றார்.