மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Date:

Share post:

மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Madras High Court directs Udhayanidhi Stalin to respond in case seeking ban on Mamannan film

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் ராமசரவணன் என்பவா் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இயக்குநா் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலா் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான படப்பிடிப்பு 2018-ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும், இந்த படம்தான் தனது கடைசி படம் என்றும் கூறியுள்ளார்

ஏஞ்சல்’ படத்துக்காக இதுவரை ரூ.13 கோடி செலவிடப்பட்டது. ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

‘ஏஞ்சல்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் எட்டு நாள்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறாா்.

எனவே, ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். ரூ. 25 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வழக்கு விசாரணை ஜூன் 28 ஆம் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...