கோடைக்காலம் வந்துவிட்டாலே பல சருமப் பிரச்சினைகளும் கூடவே வந்து சேர்ந்துகொள்ளும். அதிகமான உஷ்ணம் பலருக்கு ஒத்து வராது. பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடும்.
மனிதனின் தோல் மிகவும் மென்மையானது. அதில் வெயில் நேரடியாகத் தாக்கும்போது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தோல்களை பராமரிப்பது மிகவும் அவசியம்.இனி கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி எனப் பார்ப்போம்….
வெயிலில் வெளியில் செல்ல நேர்ந்தால், குடை, தொப்பி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
தினமும் குளிர்ந்த நீரால் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிக மணமுள்ள திரவியங்கள், பவுடர்கள் என்பவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பருத்தியிலான ஆடைகளைக் கொண்டு உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்த வேண்டும்.
முடியுமானவரை மதுபானங்கள், கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இளநீர், நுங்கு, மோர், பழச்சாறுகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவற்றை பின்பற்றுவதன் மூலம் முடியுமானவரையில் கோடைக்கால சரும பாதிப்புக்களை நிவர்த்தி செய்யலாம்.