யோகம் அறிவோம்!

Date:

Share post:

யோகம் அறிவோம்!

யோகம்

 

உங்களுக்கான சிறந்த யோகம் முறை எது?

மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு  துறையிலும் அத்துறையில் சிறந்தவற்றை அடைய,  வல்லுநர்கள்  சில அளவீடுகளை ஏற்படுத்தி  வைக்கின்றனர்.

அந்த அளவீடுகள் பல்லாயிரம் முறை சரிபார்க்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, பின்னர் பொது சமூகத்துக்கு வந்து சேரும்.

சினிமா விமர்சனம் முதல் இலக்கிய விமர்சனம் வரை இங்கே உலகளாவிய அளவீடுகள் இருப்பதையும், அப்படி முன்வைக்கப்பட்ட விசயங்கள், தனித்தன்மையுடனும், தரத்துடனும் இருப்பதை நாம் காணலாம்.

அப்படிதான் இன்று உலகம் முழுவதும் யோகத்துறையில் இருபதுக்கும் மேற்பட்ட மரபுகளும், ஏழு லட்சம் யோக ஆசிரியர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான யோக பள்ளிகளும் இருக்கின்றன.

இப்படி ஒரு மாபெரும் துறையில் மிகச் சிறந்த ஒன்றை நாம் எப்படித் தேர்வு செய்வது?

ஏனெனில், ஒரு நுகர்வுப் பொருள் போல எதாவது ஒன்றை வாங்கி உபயோகித்துப் பார்த்து, சரியில்லை எனில் பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்று யோகத்தை நாம் தேர்வு செய்துவிட முடியாது.  இது நமது உடல், மனம், புத்தி எனப் பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடன் தொடர்புகொண்டுள்ளது.  ஆகவே, ஐந்து முக்கியமான அடிப்படைகளை இந்தத் துறையின் வல்லுநர்கள்  முன்வைக்கின்றனர்.

ஆசிரிய அல்லது குருமரபு

அதாவது, ‘நீங்கள் கற்றுக்கொள்ளும் யோகவகுப்பு ஒரு மரபார்ந்த, நீண்ட ஆசிரிய/ குரு குலத்தைச் சார்ந்ததா?’ என்கிற கேள்வி, இது ஏன் முக்கியமெனில், இது போன்ற பயிற்சிகள் ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பயின்று, பயன்பெற்று, மறு சீரமைப்பு செய்யப்பட்டிருக்கும். நமது தாத்தாவின் அன்றைய உடல், மனம், உயிர் சார்ந்த தேவைகளுக்கானப் பயிற்சிகளை வழங்கி இருக்கும். அதன் பின்னர் நம் தந்தையின் உலகுக்குத் தேவையானவற்றை மறு சீரமைப்பு செய்து வழங்கி இருக்கும்.

இன்று, நம் தேவைகளுக்கானப் பிரத்யேகமான ஒன்றை வடிவமைத்து தன்னகத்தே கொண்டிருக்கும். இப்படி ஒரு நீண்ட காலத் தொடர் பயணம் இல்லாத அல்லது சமீபத்தில் உருவாகி தற்காலிகப் புகழ்பெற்ற ஒரு யோக ஆசிரியரோ நிறுவனமோ, நம் அகத்தின் ஆழத்தில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. அப்படிக் குறைவுபட்ட பயிற்சித் திட்டம் சிலசமயம் பக்கவிளைவுகளை வழங்கிவிடக்கூடும். காலவரிசைப்படி குறைந்தது ஒரு நூறு, நூற்றைம்பது  வருடப் பாரம்பரியமாவது இல்லாத, ஆசிரியரை, யோகப்பள்ளியை தேர்ந்தெடுப்பதைத்  தவிர்க்கலாம்.

அறிவியல் சார்ந்த அணுகுமுறை

ஒரு முழுமையான அறிவு அல்லது பாடத்திட்டம் என்பது மரபார்ந்த ஒன்றாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்குச் சமகால அறிவியல் சார்ந்ததாகவும் இருத்தல் அவசியமாகிறது.

அதுவும் யோகம் போன்ற உடல், மனம், இயக்கம் எனும் வாழ்வியல் அம்சங்களில் இந்த அணுகுமுறை முக்கியமான ஒன்று. ஆகவே, நீங்கள் தேர்ந்தெடுக்கும் யோக ஆசிரியர் அல்லது நிறுவனம், உங்களுக்குப் பரிந்துரைக்கும் பயிற்சிகள் சார்ந்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை முன் வைக்கிறார்களா? அந்தப் பயிற்சிகளின் சாதக பாதகங்கள் விரிவாகச் சொல்லப்படுகிறதா? எந்த வகையில் இந்தப் பயிற்சி உங்கள் உடலியல்/மனம் சார்ந்த உபாதைகளுக்கு உதவும்.

உடலில் எந்த மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், முக்கியமாகத் தவறாக பயிற்சி செய்தல் நிகழும் பக்கவிளைவுகள் யாவை? போன்ற அனைத்தும் அறிவியல்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்திய அளவிலோ, உலக அளவிலோ, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்களா? அதன் எதிர்வினை என்ன? போன்ற அறிவுசார் விவாதங்கள் நிகழ்ந்திருக்கிறதா? என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். உலக அளவில் முக்கியமான நான்கு நிறுவனங்கள் இதை மிகச் சிறப்பாகச் செய்துவருவதை இணையத்தில் சற்று தேடினாலே  கண்டுகொள்ள முடியும்.

சுய தேர்வு

ஒரு யோகப் பயிற்சி அல்லது ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதில், ஒருவருக்கு தான் எதனால் இதைச் செய்கிறோம் என்கிற கவனம் தேவை. வெறும் ஆர்வத்தால் அல்லது இணையத்தில் உலவும் யோகம் சார்ந்த அமானுஷ்ய காரணங்களால் அல்லது பொழுதுபோக்குக்காக என்கிற மேலோட்டமான, எவ்வகையிலும் நமக்கு உதவாத ஒன்றைச் செய்து பார்ப்பதைவிட அதை செய்யாமலே இருக்கலாம்.

ஆக, உங்களுடைய தேவை சார்ந்தும், அதன் முக்கியத்துவம் தெரிந்தும், வாழ்வின் இந்தத் தருணத்தில் எவ்வாறு உங்களுக்கு பலனளிக்கும் என்றும் தீவிரமாக யோசித்து, ஒரு சுய தேர்வாக யோகத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இப்படியாக, இந்த அனைத்து அம்சங்களும் ஒருசேர இல்லாவிட்டாலும், மூன்று அல்லது நான்கு அடிப்படைகளையாவது ஆராய்ந்து ஆயிரக்கணக்கான யோக கல்வியிலிருந்து சரியான ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஹஸ்த உத்தானாசனம்

இந்த பகுதியில்  நாம் ‘ஹஸ்த உத்தானாசனம்’ எனும் பயிற்சியை  காணலாம். நீண்ட நேரம்  அமர்ந்து அலுவலகப்பணியில், கணினியில் நேரத்தை செலவிடுபவர்கள் விலாஎலும்பு, கழுத்துப்பட்டை முதுகு பகுதியில் இறுக்கத்தை தேக்கி வைத்திருப்பர்.

அவர்களுடைய தவறான அமரும் நிலையால், சுவாச உறுப்பான நுரையீரல் முழுவதுமாக செயல்பட முடியாமல் குறைந்த அளவு பிராண வாயுவை இயங்கிக்கொண்டு இருக்கும்.

இது சோர்வு, களைப்பு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு உடலியல் சிக்கல்களை உண்டாக்கும், அதற்கு சரியான தீர்வாக இந்த பயிற்சியை முன் வைக்கிறது யோகமரபு.

கைகளை குறுக்கே கோர்த்த நிலையில் நின்றுகொண்டு மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது எந்த அளவு முடியுமோ அவ்வளவு முழுவதுமாக நுரையீரலை நிரப்பிக்கொண்டு கைகளை மேல்நோக்கி கொண்டு சென்று, இறுதி நிலையில்  மெதுவாக பின்புறம் சாயலாம், பின் மூச்சை வெளியிட்டுக்கொண்டே, கைகளை முன்புறமாக கொண்டுவந்து விடவேண்டும். யோகம் அறிவோம்!

 

அன்னாபிஷேகம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/en/2022/11/07/annabhishekam/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...