ராஜாத்திக்கு ஜெர்மனியில் சிகிச்சை
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள, மறைந்த கருணாநிதியின் துணைவி ராஜாத்திக்கு, ஜெர்மனி நாட்டில் உயர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செரிமான கோளாறுக்கு, ராஜாத்தி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் பூரண குணமடையவில்லை.
ஜெர்மனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என, வயிறு சம்பந்தப்பட்ட நோய் சிகிச்சைக்கான டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
அதன்படி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, தன் தாய் ராஜாத்தியுடன், இன்று ஜெர்மனி செல்கிறார். அங்கு, 21 நாட்கள் தங்கி சிகிச்சை பெற திட்டமிடப்பட்டு உள்ளது.