பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி

Date:

Share post:

பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி

பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி

அருள்நிதி சில வருடங்களாகவே ஹாரர் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த டிமாண்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் டி ப்ளாக் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதை அடுத்தும் அவர் இரண்டு மூன்று ஹாரர் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது டைரி, தேஜாவு, டிமான்டி காலனி 2 ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையைச் சேர்ந்தது என்பதால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அருள்நிதி சமீப காலமாக முறுக்கு மீசையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எதற்காக இப்படி ஒரு கெட்டப் என்று பலருக்கும் இதுவரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இப்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது அருள்நிதி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

கழுவேத்தி மூக்கன் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தில் தான் அருள்நிதி நடிக்க இருக்கிறார்.

படத்தின் டைட்டிலே இவ்வளவு கொடூரமாக இருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கழுவேத்தி என்றால் பழங்காலத்தில் கொடுக்கப்படும் ஒரு கொடூரமான தண்டனையாகும்.

ஊசி போன்ற கூர்மையான முனை கொண்ட ஒரு ஆயுதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை அப்படியே உட்கார வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுப்பதுதான் கழுவேற்றுதல் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு கொடூரமான தண்டனையை அந்த காலத்தில் அரசர்கள் மிகப்பெரிய குற்றங்களை செய்தவர்களுக்கு கொடுப்பார்களாம்.

இதை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலே பயங்கர பீதியை கிளப்புகிறது.

அப்படி என்றால் படத்தில் இது போன்ற பல தண்டனைகளும், காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் அருள்நிதி இந்த படத்தில் மிகவும் டெரராக நடிக்க இருக்கிறார். இதன் மூலம் படத்தில் அவருடைய நடிப்பை மற்றொரு பரிமாணத்தில் நம்மால் பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...