த்ரிஷாவின் சரும பொலிவுக்கு காரணம் இதுதான்
த்ரிஷாவின் சரும பொலிவுக்கு காரணம் இதுதான் – அவரே கொடுத்த டிப்ஸ் இதோ…
த்ரிஷாவின் சரும பொலிவுக்கு காரணம் இதுதான் – காலையில் வெந்நீரில் கிரீன் டீ, மாலை கண்டிப்பாக மாதுளை ஜுஸ், மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவும்.
தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி என்றால் இன்றும் நம் நினைவுக்கு வருவது நடிகை த்ரிஷாதான்.
1999 – ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக திரையில் தோன்றிய த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமா கதாநாயகியாக அறிமுகமானவர்.
அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. த்ரிஷாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி த்ரிஷாவை கனவுக்கன்னி என்று கொண்டாடத் தொடங்கினர்.
‘ஜோடி’யில் தொடங்கி மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வரை 20 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் த்ரிஷா கோலோச்சி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதும் சரிவதும் வழக்கமான ஒன்று, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகள் பலர் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரிவதில்லை.
ஆனால் அன்று முதல் இன்று வரை த்ரிஷா தனக்கான இடத்தை ரசிகர்களின் மனதில் தக்க வைத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
40 வயதை அடைந்தாலும் 25 போல காட்சியளிக்கும் த்ரிஷாவின் தோற்றம், உடல் கட்டமைப்பு, சருமம், அழகு என்று நாளுக்கு நாள் வசீகர தோற்றத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சரும பராமரிப்பு குறித்து கேட்டபோது, “காலையில் வெந்நீரில் கிரீன் டீ, மாலை கண்டிப்பாக மாதுளை ஜுஸ், மதியம் உணவிற்கு பிறகு ஃபிரஷ் ஆரஞ்சு ஜுஸ், இது உடலில் நீர்ச்சத்தை அளிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவும்.
சுக்கு பொடியை வெந்நீரில் சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் குடிப்பேன்” என்கிறார்.
சுக்கு பொடியை வெந்நீரில் சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் குடிப்பேன்” என்கிறார்.
================================================
ஆதார் – பான் இணைப்பு இன்றே கடைசி நாள்…!
மக்களே உஷார்… உடனே ஆதார் – பான் எண்ணை இணையுங்கள்… இன்றே கடைசி நாள்…!
ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் இணைக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
2023 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் அவகாசம் நிறைவடைவதால், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், ஆயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.