முதுகுவலி தீர வழி என்னவோ?
முதுகுவலி ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. தூங்கி எழும்போதே சிலருக்கு முதுகில் வலி ஏற்படும். அது, நாள் முழுவதும் தொடரும். சரியான உயரம், வடிவம் இல்லாத தலையணைகள் மற்றும் லேசான மெத்தைகளைப் பயன்படுத்துவதே அதற்குக் காரணம். திடமான, வலுவான மெத்தைகளைப் பயன்படுத்தினால் முதுகுவலியைத் தவிர்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
வாய்வுத் தொல்லை, மலச்சிக்கல் காரணமாகவும் முதுகுவலி ஏற்படும். அந்த நேரத்தில் வெந்நீரில் சீரகத்தைப் போட்டுக் குடித்தால் செரிமானக் கோளாறு சரியாகும். அத்துடன், வாழைப்பழம் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு சரியாக மலம் கழித்து வந்தாலே, வாய்வுத் தொல்லையால் உண்டாகும் முதுகுவலி சரியாகிவிடும். முதுகுத்தண்டின் அருகில்தான் சிறுநீரகம் இருக்கிறது. எனவே, சிறுநீர் கழிக்கும்போது முகுதுவலியும், சிறுநீர் கழிப்பதில் சிரமமும் ஒருசேர இருந்தால், அது சிறுநீரகக்கல் பாதிப்பாக இருக்கலாம்.