ஆனி மாத பௌர்ணமி.. சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி

Date:

Share post:

ஆனி மாத பௌர்ணமி.. சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி

ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற தற்போது வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள புகழ்பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான இந்த கோவிலுக்கு மதுரை, விருதுநகர், தேனி மாவட்ட பகுதிகளில் பாதை உள்ள போதிலும் தற்போது விருதுநகர் மாவட்ட தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிலும் பிரதோஷம் பௌர்ணமி அமாவாசை என மாதம் 8 நாட்கள் மட்டுமே இங்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியும்.

அந்த வகையில் தற்போது ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வரும் ஜூலை 1 முதல் 4 வரையிலான நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்சொன்ன நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறலாம்.

ஒரு வேளை மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...