மதுப்பழக்கத்தில் இருந்து மீண்ட அப்பா

Date:

Share post:

‘மதுப்பழக்கத்தில் இருந்து மீண்ட அப்பா’ – ரோபோ சங்கர் குறித்து உருக்கமாக பேசிய மகள்!

‘Dad who recovered from alcohol addiction’ – Daughter spoke warmly about Robo Shankar!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மிகவும் மெலிந்த தோற்றத்துடன் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

தனது தந்தை ரோபோ சங்கருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புக்கான காரணங்களை கூறி அவரது மகள் இந்திரஜா இளைஞர்களுக்கும் ஆலோசனை கூறியுள்ளார்.

சின்னத்திரையில் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்தி, தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் ரோபோ சங்கர்.

இவருக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களும், நடிகர்களும் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

ரோபோ சங்கர் இடம்பெற்றிருந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி, வேலைக்காரன் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன.

உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து படங்களில் பிஸியாக ரோபோ சங்கர் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மிகவும் மெலிந்த தோற்றத்துடன் அவரது புகைப்படங்கள் வெளியாகின.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. நம்ப முடியாத அளவுக்கு ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து வதந்திகளும் பரவியதால் கோலிவுட்டில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, உடல்நிலை பாதிப்பிலிருந்து அவர் மெல்ல மீண்டு வருகிறார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது- கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.

இதனால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு விட்டது. இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை அப்பா வாழ்ந்து வருகிறார்.

இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும். இவ்வாறு இந்திரஜா கூறியுள்ளார்.

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...