செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
Senthil Balaji will undergo surgery tomorrow
சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கின் விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
உடல்நிலைக் குறைபாடு காரணமாக காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக காவிரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், நாளை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.