இந்த டைரக்டர்ஸ் படம்னா கதைகூட கேட்காம நடிப்பேன்

Date:

Share post:

இந்த டைரக்டர்ஸ் படம்னா கதைகூட கேட்காம நடிப்பேன்” – பிரியா பவானி சங்கர் சொன்ன இயக்குநர்கள் லிஸ்ட்!

I will act without even listening to the story of this director’s film – Priya Bhavani Shankar’s list of directors!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் பொம்மை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேயாதமான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் தொடர்ந்து இவரது படங்கள் வெளியாகி வருகிறது.

கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் பொம்மை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில், ராதா மோகன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார். மேலும் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழைத்தாலும் கண்டிப்பாக எதையும் கேட்க மாட்டேன்.
வெற்றிமாறன் மற்றும் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படங்களில்  கதை கேட்காமல் கூட நடிப்பேன் எனவும் பிரியா பவானி சங்கர் கூறி இருக்கிறார்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...