கூரை இல்லத கோவிலின் கதை

Date:

Share post:

கூரை இல்லத கோவிலின் கதை

வெயில் தான் வெளிச்சம், மழையே அபிஷேகம், விண்மீன் தான் மலர்கள் என்ற வர்ணனைகள் எல்லாம் இந்த கோவிலில்ணலாம்.

இந்தியா ஒரு கோவில்கள் நிறைந்த நாடு.

எந்த ஊருக்கு போனாலும் குறைந்தது ஒரு கோவிலையாவது பார்க்க முடியும் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை வகைவகையான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

அதில் சில கோவில்கள் கட்டிட அமைப்பால் மற்ற கோவில்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாத்து பாத்து கட்டப்பட்டு இருக்கும்.

ஒரு சில கோவில்கள் அதன் தெய்வத்தின் பேரில் சொல்லப்படும் கதைகளால் பிரபலமடையும். சில கோவில்கள் அங்கு நடந்த சம்பவங்களால் அதன் தாக்கத்தால் புகழ் பெரும்.

நிழல் விழுகாத கோவில், சிலை இல்லாத கோவில்,  அர்ச்சகர் இல்லாத கோவில் என்று எல்லாம் பார்த்திருப்போம்.

ஆனால் கூரை இல்லாத கோவிலை பார்த்திருக்கிறீர்களா? அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அது நம் மாநிலத்தில் நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது.

திருச்சி அருகே உள்ள உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயில் பற்றி தான் சொல்கிறோம்.

உறையூர் என்றதும் பழக்கப்பட்டது போல தோன்றுகிறதா? பொன்னியின் செல்வன் கதையில் கேட்டிருப்பீர்கள்.

அன்றைய சோழ ராஜ்யத்தின் தலைநகராக பழையாறை இருந்தது. உறையூருக்கு வாகபுரி, கோழியூர், முக்கீசுவரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட உறையூர் சூரவாதித்த சோழன் உருவாக்கிய ஊர் என்பர்.

இந்த ஊருக்கு பல கதைகள் உள்ளன.  அதில் ஒன்று தான் பிரதானமானது.உறையூரை பராந்தகன் ஆட்சி செய்த காலத்தில் சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச் செடிகளை வளர்த்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த மன்னன், அவருடைய அனுமதியின்றி பூக்களைப் பறித்து தன் மனைவியான புவனமாதேவிக்குச் சூடவே, முனிவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் மன்னர் அதைப் பொருட்படுத்தாததால், அவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பிப் பார்க்க நெருப்பு மழைப் பொழிந்ததாம்.

ஊரிலிருந்த அனைவரும் தப்பியோட உறையூர் நகரமே எரிந்துகொண்டு இருக்க மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வெக்காளியம்மனிடம் தஞ்சம் புகுந்தனர் என்று கூறுகின்றனர்.

தாயுமான சுவாமியின் சினத்தைத் தணிக்க முழு நிலவாக அம்மன் மாறினாள். அதன் குளிர்ச்சியால்  நெருப்பு மழை நின்றது.

அதே சமயத்தில் நெருப்பு மழை தாங்காமல் கர்ப்பிணியாக இருந்த புவனமாதேவி காவிரியாற்றில் குதித்தாள்.

பின்னர் அவளுக்குக் கரிகால் பெருவளத்தான் என்னும் மகன் பிறந்தான். அம்மன் கருணையால் அவள் உயிர் பிழைத்ததால் அவள் வெக்காளியம்மன் பக்தன் ஆனார். உறையூரைக் காத்த அன்னைக்கு கோவில் எடுத்தான் என்றும் கூறப்படுகிறது.

இந்த கதையைத் தாண்டி இந்த கோவிலில் உள்ள தனித்துவம் தான் கூரை அற்ற பிரகாரம். பொதுவாக மூல தெய்வம் இருக்கும் இடத்திற்கு மேலே கலசத்துடன் கூடிய விமானம் அமைக்கப்படும்.

அது போக கோவிலின் முன் கோபுரம் வாயிலாக அமைக்கப்படும். இந்த வெக்காளியம்மன் கோவிலில் கோபுரம் உள்ளது. ஆனால் விமானம் இல்லை.

 

தெய்வத்தின் சிலை அமர்ந்திருக்கும் பிரதான கருவறைக்கு மேல்  பலமுறை கூரைகள் கட்டப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது அழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அம்மனூரை எரித்தபோது இதனால், மக்களின் வீடுகள் யாவும் மண்ணால் நிரம்பியதாம். இதனால் மக்கள் வீட்டை இழந்து வெட்ட வெளிக்கு வந்தார்களாம்.

இந்த நிலையைக் கண்ட அம்மன் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் வீட்டுக்கு மேல் கூரை அமைக்கும் வரை தன் சிலையின் மீது கூரை கட்ட வேண்டாம் என்று தேவி வெக்காளியம்மன் தனது பக்தர்களைக் கேட்டுக் கொண்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் திறந்த வெளியில் தான் அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெயில் தான் வெளிச்சம் , மழை- அபிஷேகம், விண்மீன் தான்- மலர்கள் என்ற வர்ணனைகள் எல்லாம் இந்த கோவிலில் காணலாம்.

நினைப்பதை முடித்துக்கொடுக்கும் தெய்வமாக பார்க்கப்படும் இந்த அம்மனை பார்க்க செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

சித்திரை ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி  என்று வருடத்தின் 6 மாதங்கள் விழாக்கோலம் தான்.

இக்கோயில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்குத் திறந்திருக்கும்

இந்த கதைகள் மட்டும் இல்லாமல் மற்றொரு கதை கூட உள்ளது. இந்த அம்மன் கண்ணகியின் ரூபம் என்றும் கூறப்படுகிறது.
மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் தீர்க்க நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி கட்டிய பத்தினிக் கோட்டமே இப்போது வெக்காளி கோயிலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் வெக்காளி கண்ணகியே என்றும் கூறப்படுகிறது.
கூரை இல்லா கோவிலின் கதை

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...