5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்

Date:

Share post:

5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்

சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த சனி பகவான் தற்போது தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிப்பார்.

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, நற்பலன்களை விட கெடுபலன்கள் அதிகம் கிடைக்கும்.

அதுவும் மனித வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சனி பகவான் வக்ரமாவதால், அடுத்த 5 மாத காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக, பண இழப்புக்களை சந்திக்க வைக்கும் காலமாக இருக்கும்.

இப்போது சனி வக்ர காலத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், அதுவும் எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

மேலும் திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். தம்பதியர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும்.

இக்காலம் சற்று சவாலானதாக மற்றும் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். முக்கியமாக நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும்.

முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்புகளை சந்திக்க நேரிடும்.
 மிதுனம் மிதுன ரா9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிரமமானதாக இருக்கும்.

பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பணம் தொடர்பான எந்த முடிவுகளையும் விவேகத்துடனும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள். பொறுமையைக் கையாண்டால், சமாளிக்கலாம்.

விருச்சிகம் விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும்.

தாயுடனான உறவு சற்று மோசமாக வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சொத்து விஷயம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அவசரப்பட்டு சிந்திக்காமல் பணத்தை முதலீடு செய்தால், இழப்பையே சந்திக்க நேரிடும்.

மகரம் மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி தொடர்பான சவால்களை சந்திக்க நேரிடும்.

குடும்ப சூழல் சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி விஷத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

கும்பம் கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திக்கக்கூடும்.

நிதி நிலை, மன நிலை மற்றும் உடல் நிலையில் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், கஷ்டங்களை சந்திக்க தயாராகிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் இக்காலத்தில் சனி பகவான் பல சோதனைகளை அளிப்பார். மன உறுதியுடன் எதிர்கொண்டால் சமாளிக்கலாம்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...