ஜவ்வாது பவுடர் என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்

Date:

Share post:

ஜவ்வாது பவுடர் என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்

தமிழ் சமுதாயத்தோடு மிகுந்த தொடர்புடையது ஜவ்வாது.

அதை பயன்படுத்தும் இடங்கள் மங்களகரமாகவும் தெய்வீகமாகவும் இருக்கும்.

வாசனை திரவியமான ஜவ்வாது குறித்து அறிந்திராத பல முக்கிய தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மனித உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய வாசனை திரவியங்கள் பல உண்டு.

ஆனால் முந்தைய காலக்கட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் பலர் ஜவ்வாது பொடியை வாசனை திரவியமாக பயன்படுத்தி வந்தனர்.

வெறும் வாசனை பொருளாக மட்டுமில்லாமல், பல்வேறு நன்மைகள் ஜவ்வாதுவில் இடம்பெற்றுள்ளன.

சந்தன கட்டை, ஒருசில மூலிகைகள் மற்றும் நறுமணம் கொண்ட மலர்கள் வைத்து ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது.

கோயில்களில் மூலவர் தெய்வங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மூலவர் வாயிலாக பக்தர்களுக்கு கிடைக்கும் இறையாற்றல் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

அதுதான் நேர்மறையான ஆற்றலாக பக்தர்களுக்கு கிடைக்கிறது. இதுதவிர, ஜவ்வாது மூலம் கிடைக்கும் மேலும் பல்வேறு நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது

ஜவ்வாது பவுடர் என்று சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்

கோயில்களில் ஜவ்வாது பயன்படுத்துவதால் வெறும் நறுமணம் சூழ்வது மட்டுமில்லாமல், துஷ்ட சக்திகளும் விலகி நிற்கின்றன.

புனுகுடன் சேர்ந்து ஜவ்வாது பயன்படுத்துவதால், தெய்வீகம் கோயில் முழுக்க நிறைந்திருக்கும்.

அந்த வகையில், இதை வீடுகளிலும் பயன்படுத்தும் போது வீடு முழுக்க தெய்வீகம் நிறைந்திருக்கும்.

வாசனை திரவியத்துக்கு பதிலாக, தனிநபர்களும் ஜவ்வாது பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது, நம்மையும் துஷ்ட சக்திகள் அண்டுவது கிடையாது.

கடவுள் லட்சுமியின் அம்சம் கிடைக்கிறது

நல்ல நறுமணங்களில் கடவுள் லட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோயில்களில் பயன்படுத்தும் போது இறையாற்றலும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அதையே நமது வீடுகளிலும், பூஜை அறைகளிலும் பயன்படுத்தும் போது கடவுள் லட்சுமியின் அம்சம் நமது இல்லங்களுக்கும் கிடைக்கிறது.

இதனால் வீடுகளில் செழிப்பு இருக்கும், இன்பம் அதிகரிக்கும்.

ஜவ்வாது பயன்படுத்தும் முறை

நாட்டு மருந்து கடைகளில் இன்றும் ஜவ்வாது விற்பனை செய்யப்படுகிறது. இது பேஸ்டு வடிவிலும் பொடியாகவும் கிடைக்கிறது.

அதை வாங்கி வந்து, உங்கள் வீடுகளில் இருக்கும் சாமிப் படங்கள் மீது தடவலாம். பேஸ்ட்டாக கிடைத்தால், தண்ணீரில் கலந்து பூஜை அறையில் தெளிக்கலாம்.

அதேபோன்று சந்தனப் பொட்டு வைக்கும் போது, அதில் சிறுதளவு ஜவ்வாது கலக்கலாம். அப்போது சந்தனப் பொட்டு வைக்கும் போது, நம்மைச் சுற்றி நறுமணம் கமழும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...