சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்படும் ஸ்டாலின்!
கடலூர் சிதம்பரத்தில் இளைய பெருமாளுக்கு நூற்றாண்டு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
தீண்டாமை ஒழிப்புக்காக போராடி 3 முறை நாடாளுமன்றத்துக்கும், ஒருமுறை தமிழக சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இளையபெருமாள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
1979ல் காங்கிரஸின் மாநிலத் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் அடித்தளம் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை (தீண்டாமை : பட்டியல் சாதியினரின் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சி) என்று அவர் கூறினார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.