வரப்போகும் அடுத்த 6 மாதங்களுக்கு சனியின் அருள் கிடைக்கப்போகும் ராசிகள் எவை தெரியுமா ?

Date:

Share post:

தற்போது சனிபகவான் தனது ராசியான கும்பத்தில் 2025 வரை இருப்பார்.

மார்ச் 15 ஆம் தேதி சனி, சதய நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவர் அக்டோபர் 17 ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்தில் இருப்பார். இதனால், சதய நட்சத்திரத்தில் உள்ள சனி 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தருவார். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்.மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 6 மாதம் மிக சிறப்பாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் துவங்க நினைத்தால் அக்டோபர் மாதம் வரை இதற்கு சிறந்த காலம். தொழில்முனைவோருக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. மறுபுறம், வேலையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சதய நட்சத்திரப் பிரவேசம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது.

சிம்மம் : சனிபகவான் சதய நட்சத்திரத்தில் பிரவேசிப்பது சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அக்டோபர் வரை அற்புதமான பலன்களைத் தரும். நீங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவீர்கள். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம். புதிய வேலை தேடுபவராக இருந்தால், உங்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 17 ஆம் தேதி வரை பல நல்ல பலன்களை சனிபகவான் தருவார். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். மாணவர்களும் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள்.

தனுசு : சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசியினருக்கு வெற்றியைத் தரும். இந்த நேரம் பல சூழ்நிலைகளில் உங்களுக்கு பயனளிக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வேலைக்கான தேடல் முடியும். இந்த நேரம் தொழில் முனைவோருக்கு சாதகமாக இருக்கும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...