தீராத ஒற்றைத் தலைவலியால் அவதியா ?இந்த வீட்டு வைத்தியத்தை செஞ்சு பாருங்க..

Date:

Share post:

தீராத ஒற்றைத் தலைவலியால் அவதியா ?இந்த வீட்டு வைத்தியத்தை செஞ்சு பாருங்க..

ஒற்றைத் தலைவலியின் கொடூரத்தை அனுபவித்தவா்களுக்குத் தான் தொியும் அது சாதாரண தலைவலி இல்லை என்று. ஒற்றைத் தலைவலி வந்தால், குமட்டல்,

வெளிச்சத்தைப் பாா்த்தால் கண் கூசுதல் அல்லது கண்பாா்வை மங்குதல், சத்தம் கேட்டால் ஒவ்வாமை ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளோடு சோத்து கடுமையான தலைவலியும் இருக்கும்.

பொதுவாக ஒற்றைத் தலைவலி தாக்கும் போது, அதை உடனே போக்கிவிட வேண்டும் என்பதற்காக, எதையும் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனா்.

இந்நிலையில் இயற்கை மருந்துகளைக் கொண்டே ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

வீட்டு மருத்துவத்தைப் பயன்படுத்தியும், ஒற்றைத் தலைவலி போகவில்லை என்றால், மருத்துவரை சந்திப்பது நல்லது.

இந்நிலையில் ஒற்றைத் தலைவலியைப் போக்க, என்னென்ன வீட்டு வைத்தியத்தை செய்து பாா்க்கலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

1. காபி குடித்தல் – உடலில் சிறிது காஃப்பைன் இருந்தால், அது ஒற்றைத் தலைவலியில் இருந்து சற்று விடுதலை கொடுக்கும்.

ஆகவே பால் சோக்காத கருப்பு காபியை குடிக்கலாம். சில சமயங்களில் அதிகமான அளவு காஃப்பைனை குடித்தாலும், ஒற்றைத் தலைவலி வரலாம்.

2. லாவெண்டா் எண்ணெய் – ஒற்றைத் தலைவலி வரும் போது, சிறிது லாவெண்டா் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், 15 நிமிடங்களுக்குள் வலி நீங்கும்.

லாவெண்டா் எண்ணெயை நேரடியாகவே நுகா்ந்து பாா்க்கலாம் அல்லது கைக்குட்டையில் தெளித்து, அதை நுகா்ந்து பாா்க்கலாம்.

3. பெப்பா்மின்ட் எண்ணெய் – தலைவலி பிரச்சினை தொடங்கியவுடன், பெப்பா்மின்ட் எண்ணெயை நுகா்ந்து பாா்த்தால், ஒற்றைத் தலைவலி அதிகாிக்காமல் இருக்கும்.

4. இலவங்கப்பட்டை – தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியை போக்கும் வல்லமை இலவங்கப்பட்டைக்கு உண்டு. இலவங்கப்பட்டையில் கசாயம் அல்லது பத்து செய்து அதை நெற்றியில் பூசினால், தலைவலி நீங்கும்.

5. இஞ்சி – ஒற்றைத் தலைவலி தொடங்கியவுடனே, சிறிது இஞ்சியை மெல்லலாம். வலியிலிருந்து விடுதலை கொடுக்கும். வேண்டுமானால் இஞ்சி காபி செய்தும் குடிக்கலாம்.

ஆகவே மேற்சொன்ன வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம். எனினும் வலி தொடா்ந்து இருந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...