‘சென்னை-கோவை வந்தே பாரத்: அனைத்து இருக்கைகளும் 30 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டது !
சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நேற்று துவங்கி, திறக்கப்பட்ட 30 முதல் 40 நிமிடங்களில் அதற்கான முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பயணிகள் பெரும்பாலான இருக்கைகளை முன்பதிவு செய்தனர்.
கோவை – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஏப்ரல் 9-ம் தேதி முதல் இயக்கப்படும்.
இந்த ரயில் சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவையை அடைகிறது. ரயிலின் டிக்கெட் கட்டணம் ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை 6 மணி நேர பயணத்திற்கு,
குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.1,215. உணவு இல்லாமல் கட்டணம் முதல் வகுப்பு இருக்கைக்கு ரூ.2,116 மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கைக்கு ரூ.1,057.
இந்த ரயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோவைக்கு இரு திசைகளிலும் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் 450 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும், 56 முதல் வகுப்பு இருக்கைகளும் மொத்தம் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும்.