மழைக்கால நோய்கள் தப்பிப்பது எப்படி?

Date:

Share post:

மழைக்கால நோய்கள் தப்பிப்பது எப்படி?

மழைக்கால நோய்கள்

 

மழைக் காலம் தொடங்கினாலே மழைக்கால நோய்கள் சளி, காய்ச்சல் முதல் டெங்கு காய்ச்சல் வரையிலான பல்வேறு நோய்தொற்றுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் மழைக்கால நோய்கள் பரவும் பாதிப்புகளும் அதிகரித்துவிடுகின்றன.

மழைக்கால நோய்கள் இருந்து தப்புவதே ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரிய சவால்.  இந்த நேரத்தில் வரக்கூடிய நோய்கள் என்னென்ன?  அவை ஏன் வருகின்றன? அவற்றை எப்படித் தவிர்ப்பது என மழைக் கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் நாம் அறிந்துகொண்டால், குழந்தைகளுக்கு நோய்கள் வரும் முன் தடுக்கலாம்.

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் காய்ச்சல் வந்தால் வழங்க வேண்டிய உடனடி சிகிச்சைகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் காய்ச்சல், வயிற்றுவலி, கை-கால் வலி, காது வலி வந்தால் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு உடல் எடையைக் கருத்தில்கொண்டே மருத்துவர்கள் மருந்துகள் வழங்குகின்றனர்.

அதனால், இறுதியாக மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது அவர் பரிந்துரைத்த மருந்துகளைக் கொடுக்கலாம். தொடர்ந்து குழந்தையைக் கவனிக்கவும்.

ஒருவேளை காய்ச்சல் அதிகமானால் வெதுவெதுப்பான தண்ணீரில் டவலை நனைத்து, உடல் முழுவதும் துடைத்து விடலாம். இதனால் உடலின் வெப்பநிலை தணியும்.

மழைக் காலத்தில் குழைந்தைகளுக்குப் பரவும் நோய்கள் பற்றி சொல்லுங்கள்?

பொதுவாக, மழைக் காலத்தில் தொற்று நோய் பரவுவதற்கு முக்கியக் காரணியாக இருப்பது கொசுக்களே. இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன. ‘அனோபீலஸ்’ என்ற பெண் கொசு கடிப்பதன் மூலமாகதான் மலேரியா பரவுகிறது.

இந்தக் கொசு ஒருவரைக் கடித்து, மற்றொருவரைக் கடிக்கும்போது, அதன் எச்சில் வழியாகக் கிருமிகள் பரவுகின்றன. இதனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பற்றி?

வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரில் இருந்து உருவாகும் ‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசு மிகவும் ஆபத்தானது.

இந்த வகைக் கொசுவினாலேயே டெங்கு பரவுகிறது. அதிகப்படியான காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

சராசரியாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் (Platelet) எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும்.

ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழேயும் வரக்கூடும்.

குழந்தைகளைக் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என்னென்ன?

இரவு, பகலில் குழந்தைகளின் கை, கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிட வேண்டும்.  கைகள், கால்களில் கிளவுஸ் அணிவிக்க வேண்டும். வீட்டுக் கதவு, ஜன்னல்களைப் பெருமபாலும் மூடிவைக்க வேண்டும்.

கொசு வலைகளைப் பயன்படுத்தலாம். காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டமாகக் கதவினை திறந்துவைத்தால் போதும்.

இதனால் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

எனவே இவை எல்லோருக்குமானது அல்ல. கொசுவலை, கொசு பேட் போன்றவை பாதுகாப்பானவை.

மழைக் காலங்களில் கண்சார்ந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பது பற்றி?

பருவநிலை மாற்றத்தால் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் கண் சிவந்து கண் வலி ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக்கொள்ள அடிக்கடி கண், முகம் மற்றும் கைகளைக் கழுவ வேண்டும்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், சோப் முதலியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கண் நோய் வந்தவர்களுடன் இருந்து விலகி இருப்பது நல்லது. கண் கண்ணாடி அணிவதன் மூலம் தூசு படுவதைத் தவிர்க்கலாம்.


உடல் நிலை பாதிக்கப்பட்ட குழைந்தைகளுக்கு வழங்க வேண்டிய உணவு முறைகள் என்ன?

குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இருக்கும் பகுதிகளில் விளையக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதென்பதே சிறந்தது.

உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவுகள் என்று பார்க்கும்போது, சீக்கிரம் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை வழங்க வேண்டும்.

கொதித்து ஆறவைத்த நீர், நன்கு கழுவிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள், காய்கறி சூப்புகள், சூடான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

கீரைகளின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2023/01/04/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Previous article
Next article

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...