பருப்புக் கீரை சருமம் காக்கும்

Date:

Share post:

பருப்புக் கீரை சருமம் காக்கும்

பருப்புக் கீரை

கீரைகள் தமிழ்நாட்டின் மூவா மூலிகைகள். தாவர அமிர்தங்கள். இவற்றின் குணங்களைக் கண்டறிந்து தவறாது உணவில் சேர்க்கச் சொன்ன நம் முன்னோரின் மாண்பு போற்றுதலுக்குரியது. ‘உணவே மருந்து மருந்தே உணவு, என்ற வாழ்வியல் கோட்பாட்டை நம் முன்னோர் இக்கீரை போன்ற நற்றாவரங்களிடம் இருந்தே பெற்றார்கள் என்று சொல்லலாம்.

இன்று உலகம் முழுதும் கீரையின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறது. அலோபதி முதல் அத்தனை வகையான மருந்துகளுக்கும் மூலப் பொருளாக கீரைகள் இருக்கின்றன. அப்படியான நல்ல கீரைகளில் ஒன்றுதான் பருப்புக் கீரை. பருப்புக் கீரை தமிழகத்தின் பாரம்பரியமான கீரைகளில் ஒன்று. பருப்புடன் இணைத்து இதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் ஆற்றல் அபரிமிதமானது.

இது தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு சிறு தாவரமாகும், இதன் இலை, விதைகள் உணவாக பயன்படுகிறது, இது இனிப்பு, புளிப்பு சுவைகளுடையது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில் பருப்புக் கீரையால் தேக சூடு போகும், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், குடலைப் பற்றிய நோய்கள் போகும் என்று கூறுகிறார்;

‘பிள்ளைப் பருப்பிலைக்குப் பித்தமறுங்-கொள்ளத்
தெரியுங் கடல்சூழ் இத்தேசத்தோருக்குக்
கரிய குழலணங்கே! காண்
(அகத்தியர் குணவாகடம்)

சத்துக்கள் நிறைந்த கீரைகளில் பருப்புக்கீரைக்குத் தனி இடம் உண்டு. ஏனெனில் 100 கிராம் பருப்புக் கீரையில் 20 கலோரி ஆற்றல், கார்போஹைட்ரேட்-3.4 கிராம், புரதம்-2 கிராம், சோடியம்-45 மி.கி, பொட்டாசியம்-494 மி.கி, மக்னீசியம்-17 மி.கி, இரும்புச்சத்து-9 மி.கி, கால்சியம்-157 மி.கி, ஒமேகா 3 கொழுப்பு நிறைந்துள்ளன.

ஆகையால் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இக்கீரையில் உள்ளது. வைட்டமின் ஏ சத்தும் இதில் ஏராளமாக இருப்பதால் கண் பார்வைக் குறைபாடு நீங்க இக்கீரை ஒரு அருமருந்து.

இதில் டோகோபெரால் சத்துக்கள் இருப்பதால் தோலுக்கு நல்ல வனப்பையும், வசீகரத்தையும் தருகிறது.முகப்பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம். குளுட்டத்தியோன் அமினோ அமிலம் இருப்பதால் தோலுக்கு நல்ல நிறத்தைத் தருகிறது.

தோல் சுருக்கம் நீங்குகிறது. தோல் ஆரோக்கியத்தில் பருப்புக் கீரைக்கு நிகர் வேறொன்றும் இல்லை. அழகா இருக்க வேண்டுமா, வாரம் இருமுறை பருப்புக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1) ரத்த பேதி குணமாக:-

 

பருப்புக் கீரை இலைச் சாற்றை 10-20 மி.லி தினமும் இரு வேளை உட்கொண்டால் சீதபேதி, ரத்த பேதி குணமாகும்.

2) கல்லீரல் நோய்களுக்கு:

 

பருப்புக் கீரை இலை, கீழாநெல்லி இலை, கரிசாலை இலைகளை உலர்த்திப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய்கள் குணமாகும்.

3) நீர்ச்சுருக்கு,சூடுபிடி நீங்க:-

பருப்புக் கீரை இலைச்சாறு 15-30 மி.லி வீதம் காலை, மாலை இருவேளை குடித்துவந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, சூடுபிடி, அடிவயிற்று வலி நீங்கும்.

4) தீப்புண் தழும்பு மறைய:-

பருப்புக் கீரை இலையையும் விதையையும் அரைத்து, தீப்புண், வெந்நீர் வேக்காட்டுப் புண்களில் பூசி வர அவை ஆறி, தழும்புகள் மறையும்.

5) வேர்க்குரு மறைய:-

இக்கீரையின் இலை, தண்டை அரைத்து வேர்க்குருவில் பூசிவந்தால், வேர்க்குரு மறையும்.

6) தாய்ப்பால் சுரக்க:- 

பருப்புக் கீரை- ஒரு கப், பாசிப்பருப்பு-1/4 கப், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-10, மிளகுத் தூள், வற்றல் தூள், சீரகம், மஞ்சள், உப்பு தேவையான அளவு, பருப்பைத் தனியாக வேகவைக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பின்பு கீரை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா வேக வைத்த பாசிப்பருப்புச் சேர்த்து, கடைந்து சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட வேண்டும். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும். உடலுக்கு நல்ல வலிமையைத் தரும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

7) கரும்புள்ளிகள், மங்கு மறைய:- பருப்புக் கீரையுடன், மூல்தானி மெட்டிக்கல், பன்னீர் சேர்த்தரைத்து முகத்தில் பூசி ஓரிரு மணி நேரம் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவந்தால், கரும்புள்ளிகள், மங்கு மறைந்து முகம் பொலிவடைந்து பொன்னிறமாகும்.

8) மலச்சிக்கல் நீங்க:- பருப்புக் கீரையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் இல்லாமல் நல்வாழ்வைத் தருகிறது.

 

மனம் எனும் மாயலோகம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/30/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...