இடைவட்டு வீக்கம் (Disc Bulge) தீர்வு என்ன?

Date:

Share post:

இடைவட்டு வீக்கம்

இடைவட்டு வீக்கம்

ஆங்கிலத்தில் டிஸ்க் பல்க் (Disc Bulge) என்பதை தமிழில் இடைவட்டு வீக்கம் என்று சொல்வார்கள்.

இடைவட்டு வீக்கம் என்பது பிதுக்கம், சிதைந்த அல்லது வெளித்தள்ளிய இடைவட்டு என்றும் அழைக்கப்படுகிறது.

இடைவட்டு சிதைவதால் ஏற்படும் முதுகெலும்பு நிலை இது.

இது ஒரு படிப்படியான நடைமுறை. முதுகெலும்பு தொடர்பான தீவிர பிரச்சனைக்கு இது வழிவகுக்கலாம்.

இடைவட்டு வீக்கம் ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்றதாக இருக்கலாம்.அறிகுறிகள் படிப்படியாக காலப்போக்கில் வெளிப்படலாம்.

இந்த நிலை பெரும்பாலும் முதுமை அல்லது இடைவட்டு கிழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் கூடுதல் அழுத்தம் அல்லது காயம், இடைவட்டு வீக்கம் ஆகியவை இளம் வயதிலேயேகூட ஏற்படுகின்றன.

இதைப் பற்றி விளக்குகிறார் எலும்பியல் மருத்துவர் ஏ.சண்முகசுந்தரம்.

முதுகெலும்பு இடைவட்டு என்பது ஒவ்வொரு முதுகெலும்பு வரிசையில் எலும்புகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு மென்மையான திசு. எலும்புகள் ஒன்றோடொன்று தேய்ந்து கொள்ளவிடாமல், முதுகெலும்பின் இயக்கத்துக்கும், அதற்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. இந்த இடைவட்டுகள் எந்த திடீர் அசைவிலிருந்தும் அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளும். பொதுவாக காலப்போக்கில், முதுகெலும்பு எலும்புவரிசைக்கு இடையில் உள்ள ஜெல்லி போன்ற இந்தப் பகுதி நெகிழ்வுத்தன்மையை இழந்து, சுருங்கி, கிழிந்துவிடுவதால் வெளியே தள்ளப்படுகிறது. இதனால் இடைவட்டுகளில் வீக்கமடைகின்றன. வீங்கிய இடைவட்டு அதைச் சுற்றியுள்ள நரம்புகளை அழுத்துகிறது அல்லது அதனுடன் நெருடுகிறது. இது வலியைத் தூண்டும். வலி பொதுவாக பின் இடுப்புப் பகுதியிலேயே ஏற்படுகிறது.

இடைவட்டு வீக்கத்துக்கான அறிகுறிகள்
இடைவட்டு வீக்கத்தின் அறிகுறிகளின் தன்மை, அது ஏற்படும் இடத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்தது.

 

1. முதுகு வலி: இடைவட்டு வீக்கத்துடன் முதுகுவலி படிப்படியாக உருவாகத் தொடங்குகிறது. ஆரம்ப கட்டத்தில், இயங்கினால் மட்டுமே வலி ​​ஏற்படுகிறது. இருப்பினும் பிறகு அதிகரித்த தீவிரத்துடன், ​​தூண்டுதல் இல்லாமலேயே வலி தொடங்குகிறது. பிறகு கைகள், விலா எலும்பு போன்ற மற்ற பகுதிகளுக்கு வலி பரவுகிறது.

2. பாதங்களில் பலவீனம்: இடைவட்டு வீக்கத்தின் தீவிர நிகழ்வுகள் உடல் இயக்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஒருவர் கால்களில் பலவீனத்தை அனுபவிப்பதோடு, உணர்வின்மையையும்கூட உணரலாம். முழங்கால்கள், கால்களின் இயக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

3. சிறுநீர்ப்பை, குடல் நெருக்கடிகள்: இடுப்பு நரம்புக் குழு சுருக்கப்படும்போது, அது குடல் இயக்கங்கள் குறைவதற்கும் வழிவகுக்கும். பிறகு சிறுநீர்ப்பை செயல்பாட்டையும் அது கட்டுப்படுத்தலாம். இது மருத்துவ அவசரநிலையின் அறிகுறி, உடனடி கவனம் தேவைப்படும் ஒன்று.


ஆபத்து காரணிகள், தடுப்பு நடவடிக்கைகள்

பொதுவாக, இடைவட்டு வீக்கம் என்பது வயது அல்லது காயம் காரணமாக ஏற்படும் இயற்கையான நிகழ்வு. இடைவட்டு வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஆபத்து காரணிகள் உடல் செயல்பாடுகளில் சிரமம் ஏற்படுத்துதல் அல்லது கனமான பொருட்களைத் தொடர்ந்து தூக்குதல், உடல் பருமன், உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை, அடிக்கடி வாகனம் ஓட்டுதல் ஆகியவை. வயதானவுடன் இடைவட்டு வீக்கமடைவதைத் தடுக்க முடியாது.

இருப்பினும், மிதமான உடல் எடையைப் பராமரித்தல், ஆரோக்கியமான உடல் செயல்பாடு, முதுகின் தசைகளை வலுப்படுத்துதல், நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல் அடிக்கடி இடைவெளி எடுப்பது போன்ற சில எளிய வழிமுறைகளால் இடைவட்டு வீக்கமடைவதன் தீவிரத்தைத் தடுக்கலாம். உடற்பயிற்சி, நெகிழ்வுத்தன்மையை உருவாக்குதல், முதுகெலும்பின் மீதான அழுத்தத்தை குறைக்க சரியான உட்காரும் தோற்றத்தைப் பராமரித்தல் போன்றவையும் உதவும்.

சிகிச்சை

இடைவட்டு சிதைந்தால், மேலும் சேதமடைவதைத் தடுக்க மருத்துவர் படுத்திருக்க வேண்டுமென பரிந்துரைக்கலாம்.

முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்த இயன்முறை சிகிச்சை, உடற்பயிற்சியை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

மருந்துகள் மூலம் மீட்பு சாத்தியமில்லாத தீவிர நிலைமைகளில் அறுவைசிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.

முதுகெலும்பு ஆரோக்கியம் புறக்கணிக்கப்பட்டால், அது உடல் இயக்கம், நெகிழ்வுத்தன்மையில் நிரந்தர சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

வழக்கமான உடற்பயிற்சி, அடிக்கடி உடலை இயக்குவது, தசையின் மீதான அழுத்தத்தை குறைத்தல் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும், அவ்வீக்கம் ஏற்படுவதையும் தடுக்கும்.

மேலும் அறிகுறிகளோ வலியோ நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 

சைக்கிளிங் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/11/09/%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...