மகளிர் நலம் ; மாதவிடாய்த் தீர்வுகள்

Date:

Share post:

மாதவிடாய்த் தீர்வுகள்

மகளிர் நலம் ; மாதவிடாய்த் தீர்வுகள்

சித்தா முறையில் மகளிர் நல உணவு அனைத்து அரசாங்க சித்த மருத்துவமனைகளிலும் மகளிர் உணவு என விழிப்புணர்வு போஸ்டர்ஸ் ஒட்டியிருப்பார்கள். மாதவிலக்கு சீராக இருப்பதற்கும், குழந்தையின்மை தடுப்பதற்கும், ஆரோக்கியமான இனப்பெருக்க உறுப்புகளுக்கும் பலம் சேர்க்கும். அதைப் பின்பற்றலாம். அவை:

மாதவிடாய்த் தீர்வுகள்

1.மாதவிலக்கு தொடங்கிய 1 – 5 நாட்களுக்கு, எள்ளு உருண்டை சாப்பிட வேண்டும்.

 
செய்முறை: கருப்பு எள்ளு – 1 டம்ளர், ராகி மாவு – 1 டம்ளர், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி – 1 டம்ளர். எள்ளை வறுத்துத் தனியாக பவுடர் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொஞ்சம் தண்ணீர் கலந்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசைந்து, தோசைக்கல்லில் தட்டி நெய் விட்டு ரொட்டி சுடுவதுபோல ராகி மாவு வேகும் அளவுக்கு ரொட்டியாகச் சுடவேண்டும். ரொட்டியாகச் சுட்டதை பிய்த்து போட்டு, ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். ராகிப் புட்டு வருவது போல உதிரியாக வரும். முதலில், எள் பொடி போட்டு மிக்ஸியில் ஓட்டவும், பின்னர் ராகி பவுடரையும் போட்டு அரைக்கவும். இறுதியாக நாட்டுச்சக்கரையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அரைக்கவும். இதைக் கையால் உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதை மாதவிடாய் தொடங்கி 1-5 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். கெட்டும் போகாது. அதிக சுவையாக இருக்கும்.

 

2.மாதவிலக்கு முடிந்த 6 – 16 நாட்கள் வரை, உளுந்தக்களி சாப்பிடவும்.

செய்முறை: சம்பா அரிசி – 1 டம்ளர், கருப்பு உளுந்து – 1 டம்ளர், கருப்பட்டி – ½ டம்ளர், நல்லெண்ணெய் -30ml, சுக்கு, ஏலப்பொடி – சிறிதளவு. இரண்டையும் இளவறுப்பாகவும் வறுத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் ரவை அளவுக்குப் பவுடர் செய்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தே வைத்துக் கொள்ளலாம்.
அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை ஒரு டம்ளர் அளவு எடுத்துக்கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் 2 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி எடுத்துக் கரைத்து, அதை வடிக்கவும். ஒரு கொதி வந்ததும், மாவை போட்டு ரவை கேசரி கிளறுவது போலக் கிளற வேண்டும்.

முட்டை அடிக்கும் பீட்டர் கரண்டியால் கிளறினால் கட்டி இல்லாமல் வரும். மாவு வெந்து வரும்போது, ஒரு குழி கரண்டி அளவுக்கு 20-30ml செக்கு நல்லெண்ணெயை ஊற்றி மேலோட்டமாக விடவேண்டும்.

களி பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு அல்வா போலத் திரண்டு வந்தபிறகு சுக்கு, ஏலப்பொடி சேர்த்து இறக்கவேண்டும்.

அசைவம் சாப்பிடுவோர், நல்லெண்ணெய் ஊற்றுவதற்கு முன் நாட்டுக்கோழிமுட்டை ஒன்றை உடைத்து ஊற்ற வேண்டும். அதன் பிறகுதான் நல்லெண்ணெய் விட்டுச் செய்யலாம். புட்டிங் போல, கேக் போல வரும். மாலையில், கோயிலில் ஒரு தொன்னை பிரசாதம் கொடுக்கும் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்கூட அடுத்த மாதமே பலன் தெரியும்.

3. 17 – 28 நாட்கள் வரை, வெந்தயக்களி சாப்பிட்டு வரவேண்டும்.

 

செய்முறை: சம்பா அரிசி – 1 டம்ளர், வெந்தயம் – 1/2 டம்ளர், நாட்டுச்சர்க்கரை – ½டம்ளர்,  நெய் – 30ml, சுக்கு, ஏலப்பொடி – சிறிதளவு. மேற்சொன்ன உளுந்துக்களியின் அதே செய்முறையில் வெந்தயக்களியும் செய்யவேண்டும். அவ்வளவுதான். அறிவியல் ரீதியாக, உளுந்தில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ் அதிகம். முதல் 14 நாளுக்கு ஈஸ்ட்ரோஜென் கொடுப்பார்கள். அதன் பிறகு புரொஜெஸ்ட்ரான் மாத்திரைகள் தருவார்கள்.

அதேபோலச் சித்த மருத்துவத் தத்துவத்தில், முதல் 14 நாட்களுக்கு எள், உளுந்து தொடர்பானதும் அடுத்த 14 நாட்களுக்குப் புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரொஜென் இருக்கின்ற வெந்தயக்களியை சாப்பிடச் சொல்கிறோம். ஹார்மோன் மாத்திரைகள் எடுப்பதால் பக்கவிளைவுகள் வருகின்றன. அதற்குப் பதிலாக, இந்த மகளிர் நல உணவு பட்டியலை சாப்பிட்டு வர பெண் உடல் எந்தத் தொந்தரவுகளும் இன்றிச் சுகமானதாகிவிடும். 3 மாதம் வரை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, அனைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கியமான கர்ப்பப்பை, சீரான மாதவிடாய் மற்றும் சீரான இயக்கம் கொண்ட இனப்பெருக்க உறுப்புகளாகிறது. முதுகு வலி வரவே வராது.

உடல் நலம் ஆகிவிட்ட பின்னர், மேற்சொன்ன 3 உணவுகளை அந்தந்த நாட்களில் வாரம் 2-3 முறை சாப்பிடலாம்.

மல்லி பூவும் ஹைபோதலாமஸ் சுரப்பியும்பெண்கள் தினமும் குண்டு மல்லிப்பூ வைத்துக்கொண்டாலே மாதவிடாய் சீராக வரும்.

மல்லிப்பூவின் மணம் ஹைபோதலாமஸ் சுரப்பியான இந்த சூப்பர் ஹீரோவை டியூன் செய்யும் ஒரே பூ, மல்லிப் பூ மட்டுமே.

அதனால்தான், பால் கொடுக்கும் தாய்மார்களை மல்லிப்பூ வைக்கக் கூடாது என்பார்கள். மல்லிப்பூவின் மணம், குழந்தையின் பசியைக் கட்டுப்படுத்திவிடும். அதனால் வேணாம் என பெரியவர்கள் சொல்வார்கள்.

மேலும், தாயின் ஹார்மோன்ஸ் துரிதமாகச் செயல்பட்டு அடுத்தக் குழந்தை கருவுற்ற நேரலாம் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் மல்லிப்பூ வைக்கக் கூடாது.

மருந்துகள், உணவு சரியாகச் சாப்பிடாத ஹாஸ்டலில் உள்ள மாணவிக்கு, மூன்று மாதத்துக்குக் குண்டு மல்லிப்பூ வைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

கால் முழம் பூவாவது வைக்கச் சொல்லி இருந்தது. அதை மட்டும் பின்பற்றியே மாதவிலக்குச் சீராகிவிட்டது.

மாதாமாதம் குண்டுமல்லியை வைத்துக்கொள்கிறார்கள் ஹாஸ்டல் மாணவிகள்.

இது தொடர்பான அறிவியல் உண்மைகளை இன்டர்நெட்டில் ரிசர்ச் பேப்பராக இருக்கின்றன.

வாழ்வியல் முறையும் உணவுப் பழக்கமே போதும். நம் உடலே மருத்துவராக மாறி நோய்களைச் சரிசெய்துவிடும்.

 

அருகம்புல் பொடியின் மருத்துவப் பயன்கள்

http://sindinga9news.com/2022/08/10/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/

 

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...