புதன்கிழமை 14.09.2022 ராசி பலன்

Date:

Share post:

புதன்கிழமை 14.09.2022 ராசி பலன்

மேஷம்

உங்களின் ராசிக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும்.

வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள்.

தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது, வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

துலாம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். சேமிப்பு உயரும்.

பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.

நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியம் கைகூடும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் குறையும்.

திருமணம் மற்றும் சடங்கு வீடுகளில் சாப்பிடலாமா 

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...