பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்
இரண்டாம் எலிசபெத் வாழ்க்கை வரலாறு
1926-ம் ஆண்டு பிறந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் ராணியாக அரசுப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.96 வயதாகும் இரண்டாம் எலிசபெத், பிரிட்டனில் நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்த சாதனையை, 2015ல் புரிந்தார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927 – 2016 வரை, 70 ஆண்டு, 126 நாட்கள் அரசராக இருந்தார்.
இந்த வீடியோவை குழந்தைகளுடன் பாருங்கள்
அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் முறியடித்து உலகிலேயே மிக நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்தோர் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரான்சின் பதினான்காம் லுாயிஸ், 1643 – 1715 வரை, 72 ஆண்டு, 110 நாட்கள் அரசராக இருந்து, சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பிரிட்டன் ராணி மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
‛பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார்.
அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்’ இவ்வாறு மோடி தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.