தூதுவளையின் பல்வேறு நன்மைகள்

Date:

Share post:

தூதுவளையின் பல்வேறு நன்மைகள்

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இ

இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது.

தூதுவளை என்பது உணவிலும் மருத்துவத்திலும் அதிகம் பயன்படும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை கொடியாகும். சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ள காயகற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும்.

குறிப்பாக இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும் தன்மை கொண்டது.

தூதுவளை அமைப்பு
இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் கொடியிலும், இலைகளிலும் முட்கள் காணப்படும்.

சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை வேறு பெயர்கள்
தூதுவளையானது சிங்க வல்லி, ரத்து நயத்தான், அளர்க்கம், தூதூவேளை, தூதூளம், தூதுளை போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

தூதுவளை பயன்கள்

தூதுவளையின் பல்வேறு நன்மைகள்

பல்வேறு நோய்களை குணமாக்கும்
தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடல் எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.

இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.

தாது விருத்தி உண்டாகும்
கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும், தாது விருத்தி அதிகரிக்கும், ஆண்மை சக்தியும் பெருகும்.

வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.

முச்சு திணறல் அகலும்
பழத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி, அந்த பொடியை புகை பிடிப்பது போல செய்து வர, இரைப்பு, இருமல், மூச்சுத் திணறல், சளி போன்றவை தீரும்.

எலும்புகள் உறுதியாகும்
கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பு களையும், பற்களையும் பலமாக்கும். தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, அதனுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி இரும்பு போல உறுதியுடன் இருக்கும்.

ஆண்மை அதிகரிக்கும்
நன்கு மை போல அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம், உஷ்ணம் குறையும். உஷ்ணம் குறைவதால் ஆண்களுக்கு இந்திரியம் அதிகம் உற்பத்தியாகி ஆண்மையைக் அதிகரிக்கும்.

தூதுவளையின் பல்வேறு நன்மைகள்

சளியை விரட்டும்
இலை மற்றும் வெற்றிலை இரண்டையும் சம அளவு எடுத்து காலை வேளையில் மென்று தின்றால் சளி மறைந்து விடும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்ததாகும்.

முதுமையை தள்ளி போடும்
காயை ஊறுகாய் போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் குணமாகும். தூதுவளை அற்புதமான உடல் தேற்றி இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் முதுமை தோற்றம் ஏற்படாது.

முதுமை காரணமாக வாடுபவர்கள் தூதுவளையை தினசரி உண்டு வர இழந்த சக்தி மீண்டும் கிடைக்கும்.

தைராய்டு கட்டிகள் குணமாகும்

தூதுவளையானது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது.

தூதுவளை சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

கண் நோய்கள் தீரும்
காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் போலோ செய்து ஒரு மண்டலம் கற்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுமே நீங்கும்.

அஜீரண கோளாறு நீங்கும்
நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தூதுவளையின் பல்வேறு நன்மைகள்

தூதுவளை பொடியை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...