ரெட்ஜெயிண்ட் உடன் மோதும் அண்ணாச்சி

Date:

Share post:

ரெட்ஜெயிண்ட் உடன் மோதும் அண்ணாச்சி

ரெட்ஜெயிண்ட் உடன் மோதும் அண்ணாச்சி

தி லெஜன்ட்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள திரைப்படம் தி லெஜன்ட். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர்கள் வெளிவந்தன.

தி லெஜண்ட் என்பது ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களால் எழுதி இயக்கப்பட்ட ஒரு தமிழ் அதிரடி காதல் திரைப்படமாகும்.

லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, கீதிகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கான ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் ரூபன் படத்தொகுப்பை செய்துள்ளார், எஸ்எஸ் மூர்த்தி கலை இயக்கியுள்ளார்.

லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஜே.டி.-ஜெர்ரியை இயக்குனராகவும், லெஜண்ட் சரவணனை முக்கிய வேடத்தில் வைத்தும் ஒரு திட்டத்தை அறிவித்தது.

இது அவர் தனது கடையின் விளம்பரப் படங்களில் பல கதாநாயகிகளுடன் முன்பு தோன்றிய பிறகு இந்தப் படத்தில் நடிகராக அறிமுகமாகும். விளம்பரத்தில் இருக்கும் திரைப்படத் துறை.

தொழிலதிபராக மாறிய நடிகரின் தயாரிப்பின் முதல் தயாரிப்பு முயற்சியாகவும் இது அமையும். 3 மார்ச் 2022 அன்று, படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டருடன் படத்தின் தலைப்பு தி லெஜண்ட் என அறிவிக்கப்பட்டது.

காப்பான் மற்றும் ஆர்.வேல்ராஜ் மற்றும் ரூபன் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கையாள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனங்களை எழுதுவதாக அறிவிக்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் என்று கூறப்பட்டது, ஆனால் இந்த செய்திகள் பொய் என நிரூபிக்கப்பட்டது.

அன்றே அனைவரின் வரவேற்பை பெற்றது,இது அண்ணாச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாக நினைத்து மகிழ்ச்சி அடைந்து படத்தின் அடுத்தகட்ட வேலைக்கு தயாரானார்.

ஆடியோ லான்ச்

படத்திற்கு பிரம்மாண்டமாக செலவு செய்த அண்ணாச்சி அவர் ஆடியோ லான்ச் இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக செய்தார்.

இந்த செயலும் படத்திற்கு மிக முக்கியமாக ப்ரொமோஷனாக அமைந்தது.

அண்ணாச்சி இந்த பிரம்மாண்டம் வரவேற்பு அனைத்தையும் பணமாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முதலில் நடிக்க வரும் பொழுது ஆசைக்காக மட்டும் நடிக்க வந்தார்.

மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து அண்ணாச்சி இதில் எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என முயற்சி செய்தார்

அதன் விளைவாக தனியாக விநியோகஸ்தர்களிடம் அதிக விலைக்கு படத்தை விற்க முயன்றார். ஆனால் விநியோகஸ்தர்களும் பிடி கொடுக்கவில்லை.

இதற்கு காரணம் அண்ணாச்சியின் படம் பிரம்மாண்டம் என்ற காரணத்தால் மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஆனால் அண்ணாச்சியின் முகத்திற்காக யாரும் படத்தை பார்க்க போவதில்லை என்று விநியோகஸ்தர்களும் வாங்க மறுத்து விட்டனர். அண்ணாச்சி என்ன செய்வது என்று அமைதியாகிவிட்டார்.

படத்தின் வெளியீடு தேதி அறிவித்த பின் அண்ணாச்சி படத்திற்கான வேலை வேகமெடுத்தது. அவரவர் கேட்ட பணத்திற்கு படத்தை விற்றார்.

முக்கியமாக தமிழ்நாட்டில் அன்புச்செழியனிடம் அடைக்கலமானார். தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியிட ஆசைப்பட்ட அண்ணாச்சிக்கு வந்தது புது சிக்கல்.

ரெட் ஜெயன்ட்

ரெட்ஜெயிண்ட் உடன் மோதும் அண்ணாச்சி

இது வரை அண்ணாச்சி அனைத்து தியேட்டர்களையும் வைத்துள்ள ரெட் ஜெயன்ட் முவிஸை சந்திக்கவில்லை. இதன் காரணமாக அண்ணாச்சிக்கு அனைத்து தியேட்டர்களும் கிடைப்பது சந்தேகம்.

காரணம் சந்தானம் நடிப்பில் குலுகுலு என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியிடப்பட உள்ளது.

சந்தானம் திரைப்படத்திற்கு உதயநிதி அதிக திரையரங்குகளை கொடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அண்ணாச்சியை கனவு கலைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வளவு பண்ண அண்ணாச்சி ரெட் ஜெயன்ட் மூவிஸ் பார்க்காமல் படத்தை வெளியிட முடியாது என்பதுதான் உண்மை.

இதனால் உதயநிதி ஸ்டாலினை அண்ணாச்சி பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இல்லை என்றால் நேருக்கு நேராக மோதி சண்டையில் சாட்டை கிழிவது உறுதிதான்.

ரெட்ஜெயிண்ட் உடன் மோதும் அண்ணாச்சி

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...