மேஷ ராசியின் குணநலன்கள்

Date:

Share post:

மேஷ ராசியின் குணநலன்கள்

மேஷம் இராசி அடையாளம் – மேஷ இராசியின் பண்புகள்
நடத்தை மற்றும் ஆளுமை செவ்வாய் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

இவர்கள் வலிமையானவர்களாகவும், எதிலும் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிக் காண்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கிறது.

மேஷம் இராசியின் சின்னம்: மேஷம் இராசி அடையாளத்திற்கான சின்னம் ராம்.

இது நீண்ட கூர்மையான கொம்புகளைக் கொண்ட ஆடு வடிவத்தை கொண்டிருக்கும். இது அச்சமற்ற மற்றும் தைரியமான அணுகுமுறைக்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

இந்த சின்னத்தைப் போலவே, இவர்கள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி வாழ விரும்புவார்கள்.

அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் சமரசம் செய்யாதவர்களாக இருப்பார்கள்.

மேஷ இராசிக்காரர்களின் உடல் அமைப்பு : : மேஷம் இராசிக்காரர்கள் தங்களையும் தங்கள் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார்கள்.

எந்தவொரு பணியை செய்தாலும் அதில் நேர்மை மற்றும் சுத்தம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

எப்போதும், எந்த செயலிலும் அவர்களின் கண்களும் காதுகளும் திறந்தே இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் முக அமைப்பை கவனித்தால் அவர்களின் புருவங்கள் மேல்நோக்கி வளைவதை கவனிக்கலாம்.

அவர்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் தரும் முதல் முன்னுரிமை பாதுகாப்பு தான்.

மேஷ இராசிக்காரர்களின் ஆளுமை: மேஷ இராசிக்காரர்களின் நற்பண்புகள்தான் அவர்களுடைய தனித்த அடையாளமாக இருக்கும்.

இது தவிர, செவ்வாய் கிரகமே அவர்களின் ஆளும் இறைவன் என்பதால், அவசர அவசரமாக காரியங்களை நிறைவேற்றும் பழக்கமும் இருக்கும்.

அதேசமயம் இந்த இராசிக்காரர்களின் சிந்தனை மற்றும் எதிர்கால திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை திறன்களும் சரியான விதத்தில் இருக்கும்.

அதோடு அவர்கள் மிகக் குறைந்த கடின உழைப்பை மட்டுமே போட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

இது தவிர, அவர்கள் தங்கள் திறமைகளை எப்போதும் சோதித்துப் பார்க்கவே விரும்புவார்கள்.

நடிப்பு மற்றும் நடனம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

மேஷ ராசிக்காரர்களின் குறைபாடுகள்: : மேஷ ராசிக்காரர்கள் மிக எளிதாக கோபப்படுவார்கள்.

அவர்கள் மீது வீசப்படும் அவமானங்களை அவர்களால் தாங்க முடியாது. பிடிவாதம் அதிகம் இருக்கும்.

பழி வாங்கும் எண்ணம் , தவறுகளை ஒப்புக் கொள்ளாதது போன்ற குறைபாடுகள் இருக்கும். குடும்பத்தினருடனும் மனக்கசப்புகள் இருக்கும்.

குணநலன்கள்

12 ராசிகளில் முதல் ராசி மேஷம் ராசி நெருப்பு தத்துவம் கொண்ட சர ராசி.

நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் பயமறியாதவர்கள், எதையும் தன்னம்பிக்கையுடன் தைரியமாக எதிர்கொள்பவர்கள்.

பிடிவாத குணம் கொண்டவர்கள். கொஞ்சமாக பணம் வந்தால் கூட ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள்.

இந்த ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். சூரியன் உச்சமடைகிறார், சனி நீச்சமடைகிறார்.

மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை, ராசியின் கடவுள் முருகன்.

இந்த ராசிக்குரிய இடங்கள் மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை.

இந்த ராசியில் பிறந்தவர்கள் செயலில் சரமாகவும் தத்துவத்தில் அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி.

அழகானவர்கள்

அசுவினி நான்கு பாதம், பரணி 4 பாதம், கார்த்திகை 1 பாதம் என மொத்தம் ஒன்பது பாதங்கள் உள்ளன. சுறுசுறுப்பானவர்கள். நிறைய புத்திசாலித்தனமும், சிற்றின்ப பிரியராகவும் இருப்பார்கள்.

ஆணவம், தலைக்கணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், நிமிர்த்த நடையும், நீண்ட புருவமும், அழகான பல்வரிசையும், அடர்த்தியான தலைமுடியும் கொண்டவர்கள்.

கோபம் தலைக்கு மேல் வரும். தலையிலேயே முட்டி காயப்படுத்தி கொள்வார்கள்.

நிதி நிலைமை

நிறைய பணம் சம்பாதிப்பார்கள். கட்டிய மனைவியை கண் கலங்க வைக்கக் கூடாது. வாழ்க்கை துணையின் மூலம் வசதி வாய்ப்புகள் பெருகும். அறுசுவை உணவு பிரியர்.

கூட்டுக்குடும்பமாக இருப்பார்கள். பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். தகவல் தொடர்புத்துறையில் சிறந்து விளங்குவார்கள்.

விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். வேகம் இருக்கும் அளவிற்கு விவேகம் இருக்காது. நிறைய பணம் சம்பாதித்தாலும் சேமிக்க மாட்டார்கள்.

பிடிவாத குணம்

ஐந்தாம் அதிபதி சூரியன் சூரியன் மேஷத்தில் உச்சம் பெறுவதால் பெரும்பாலும் ஆண்குழந்தை பிறக்கும் இந்த இடம் நெருப்பு ராசி ஆகவே முதல் குழந்தை கருச்சிதைவு ஏற்படும்.

இவர்களின் குழந்தைகள் பிடிவாத குணம் கொண்டவர்கள். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பார்கள், வேலை செய்பவர்களுடன் தோழமையாக இருப்பார்கள். அதிகாரம் செலுத்தமாட்டார்கள்.

வேலை வாய்ப்பு எப்படி

காவல்துறை, ராணுவம், விளையாட்டுத்தறை, பொறியியல் துறை, இரும்பு தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்.

செங்கல்சூளை, மண்பாண்டம், சுரங்கத்தொழில், ஆயுதம் தயாரித்து விற்பனை செய்தல், சமையல் கலை, பூமி தொழில், விவசாயம் செய்பவர்.

பூர்வீக சொத்து கிடைத்தாலும் அதை மறுத்து விடுவார்கள்.

ஆலய தரிசனம் செய்வார்கள்

மாடி வீட்டில் வசிப்பார்கள். வீட்டினை தூய்மையாக பராமரிப்பார்கள். தனக்கு வரும் வருமானத்தை கொண்டு தர்மம் செய்வார்கள்.

விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார். அடிக்கடி புண்ணிய யாத்திரை செல்வார்கள். குருவின் ஆசி இருக்கும்.

நிறைய பாக்கியங்கள் பெற்றவர்கள். தீர்க்க ஆயுள் கொண்டவர்கள்.

உடல் ஆரோக்கியம் மேஷ ராசியில் பிறந்தவர்களை நரம்பு பிரச்சினை அதிகம் தாக்கும். தண்ணீரில் கண்டம் ஏற்படும்.

வெளிநாடு வெளியூர் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிக்கடி மரண பயம் வரும். மான ரோசம் அதிகம் கொண்டவர்கள். இவர்களின் ஆசைகள் காலம் கடந்துதான் நிறைவேறும்.

கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

1. அதிர்ஷ்ட எண்: 9

2. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

3. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

4. அதிர்ஷ்ட ரத்தினம்: பவளம்

5. வணங்கவேண்டிய தெய்வம் : முருகப்பெருமான்

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...