உதயநிதியின் அடுத்த படத்தலைப்பு
திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உதயநிதி நடிக்கும் படங்கள் அவரது இமேஜை உயர்த்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள்.
அந்த விதத்தில் அவர் நடித்து ‘நெஞ்சுக்கு நீதி’ படம் வெளிவந்தது. இதற்கடுத்து அவர் நடித்து வர உள்ள படத்திற்கு ‘கழகத் தலைவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தடையறத் தாக்க, மீகாமன், தடம்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘ஈஸ்வரன், பூமி’ படங்களில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொருளாதாரக் குற்றங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். அதைச் சுற்றி நடக்கும் அரசியல் விஷயங்களும் படத்தில் உண்டாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்தாலும் இறுதிக் கட்டப்பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி பொறுமையாக இழைத்து வருகிறாராம். விரைவில் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.
திரைத்துறை, அரசியல் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி அரசியலில் களமிறங்கிய பிறகு, தான் நடிக்கும் படங்களில் மிகவும் பொறுப்புடன் இருக்கும் வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அப்படி, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.
இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு முன்னரே உதயநிதி, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால், இதுவரை இப்படத்தின் தலைப்பு குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவந்ததில்லை.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு ‘கழக தலைவன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதியின் அடுத்த படத்தலைப்பு
விரைவில் இப்படத்தின் First லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கர டெரராக நடிக்கப்போகும் அருள்நிதி
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.