கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

Date:

Share post:

கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

விக்ரம் படத்தின் சாதனையால் கிடைத்த அங்கீகாரம்

இத்தனை வருடங்கள் கமலஹாசன் திரைப்படங்களில் நடித்ததற்கு, தற்போது தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகாவும் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த திரைப்படங்களான இந்தியன் 2,தேவர் மகன் 2, உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீர நாடான துபாய்க்கு செல்ல கமலஹாசனக்கு சிறப்பு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசாவை பெற்றிருந்தார்.

இவரை தொடர்ந்து நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், நடிகர்கள் பார்த்திபன், நாசர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

இதனிடையே 60 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தற்போது கோல்டன் விசாவினை வழங்கி துபாய் அரசு கௌரவித்துள்ளது.

இந்த கோல்டன் விசாவின் பலன்களின் மூலமாக அடுத்த 10 வருடங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லலாம், அதேபோல அங்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.

ஏற்கனவே விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக, துபாயில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவின் வெளிப்புறத்தில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

இதுவே தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் பூர்ஜ் கலிஃபாவில் ஓளிபரப்பப்பட்ட முதல் ட்ரைலர் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றிருந்தது.

மேலும் கமலஹாசன், இப்படத்தின் ட்ரைலர் பூர்ஜ் காலிஃபாவில் ஒளிபரப்பானதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

விக்ரம் திரைப்படம் தமிழ், தெலுகு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், உலகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியான நிலையில், துபாயிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

இதனிடையே தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்திருந்த கமலஹாசனுக்கு, தற்போது விக்ரம் படத்தில் நடித்து புகழ்பெற்றதன் மூலமாக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது கோலிவுட் சினிமாவிற்குக்கே பெருமைதான்.

கமல் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அவரின் இந்த சந்தோஷத்திற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம்தான்.

இந்த படத்தின் மூலம் கமல் பல கோடிகள் லாபம் பார்த்துள்ளார். ஏற்கனவே விக்ரம் திரைப்படம் அவரை பல இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

மேலும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கமல் சென்றபோது அங்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவர் நெகிழ்ந்து போய் உள்ளார்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் கோல்டன் விசா அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

கமலை கௌரவித்த ஐக்கியஅரபு நாடு

அதுமட்டுமல்லாமல் கமல் தற்போது துபாயில் வீடு வாங்கும் பிளானிலும் இருக்கிறாராம். ஆனால் அவர் ஏற்கனவே அங்கு ஒரு வீடு வாங்கி விட்டதாகவும் தற்போது திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

எது எப்படி இருந்தாலும் துபாய் அரசு கொடுத்த இந்த அங்கீகாரம் கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில் துபாய் அரசாங்கம் தற்போது ஆண்டவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்றை கொடுத்துள்ளது.

அதாவது கமலுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. முன்னதாக நடிகர் சிம்புவுக்கும் இந்த கோல்டன் விசா கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோல்டன் விசாவின் மூலம் கமல் எப்போது வேண்டுமானாலும் துபாய் நாட்டிற்கு சென்று வர முடியும். அவருக்கு எந்த ஒரு விசா தடையும் அங்கே இனிமேல் கிடையாது.

இதனால் ஆண்டவர் தற்போது உற்சாக மிகுதியில் ரொம்பவும் பூரிப்படைந்து இருக்கிறாராம்.

இங்கே கிளிக் செய்யவும்

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

– மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...