பார்கின்சன் நோய்

Date:

Share post:

பார்கின்சன் நோய்
பார்கின்சன் நோய்
ஒரு தாவரத்தின் உயிர் வாழ்வு அதன் வேரின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பை சார்ந்துள்ளது. அதேபோல் ஒரு மனித உடலின் ஆரோக்கியத்திற்கு

உடலின் ஆணிவேராக கருதப்படும் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இதனால்தான் ஆயுர்வேதத்தில், தலை என்னும் சிரசு, உத்தமங்கம் என்று கருதப்படுகிறது, அதாவது, உடலின் மிக உயர்ந்த முக்கிய பகுதியாக கருதப்படுகிறது, அப்பகுதியில் ஏற்படும் ஓர் மூளைச் சிதைவு நோய்க்கு ‘நடுக்குவாதம்’ (Parkinson) என்று பெயர்.  இந்த நடுக்குவாதத்தைப் பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

நடுக்குவாதத்தில், நரம்பு மண்டலம் பாதிப்படைந்து அதன் காரணமாக அசைவுகளில் பாதிப்பு, ஒரு செயலை செய்வதில் குறைந்த செயல்திறன், தசை இறுக்கம் ஆகியவை ஏற்படும். இதை சமகால மருத்துவத்தில், ‘பார்க்கின்சன் நோய்’ என்று விளக்குகின்றனர்.

பார்கின்சன் நோய் ஏற்பட காரணங்கள்

*இந்நோயில் பல அறிகுறிகள், மூளையில்உள்ள டோபமைன் (Dopamine) எனப்படும் ஹார்மோன்  குறைவதால் ஏற்படுகிறது. டோபமைன் சுரப்பி 80 சதவீதம் குறைந்த பிறகே இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படும். அதனை உற்பத்தி செய்கின்ற சில மூளை செல்கள் இறந்து விடுவதே இதற்கு காரணமாகும்..

*பார்கின்சன் நோயில் நரம்பு முடிச்சுகளில்( Nerve Endings) பாதிப்பு ஏற்பட்டு அதனால் நார்- எபிநெபரின் (Norepinephrine) என்னும் நரம்பியக் கடத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்த கட்டுப்பாடு போன்ற தன்னியக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்னியக்க நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதிலும் நார்- எபிநெபரின் (Norepinephrine)  முக்கிய பங்கு வகிக்கிறது.

*சுற்றுச்சூழலும் இந்நோய் வருவதற்கு ஓர் முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

*பரம்பரை நோயாகவும் இந்நோய்வருகிறது.

அறிகுறிகள்

*இந்த நோயின். முதல் அறிகுறியாக நடுக்கம் ஏற்படத் தொடங்கும். பின், தலை மற்றும் கை கால்களில் நடுக்கம் ஏற்படும்.
*இந்நோயில், ரெஸ்ட்ட்ரெமர்  (Rest tremor) காணப்படுகிறது. அதாவது ஓய்வெடுக்கும் பொழுது நடுக்கம் காணப்படும், ஆனால் உடல் உறுப்புகள் செயலில் இருக்கும் போது, நடுக்கம் காணப்படுவதில்லை; அல்லது, குறைந்த நடுக்கம் காணப்படலாம்.
*கைகளை நீட்டி மடக்கும்பொழுது சிரமம், விறைப்புத் தன்மை (Stiffness) காணப்படும்.
*பேசுவதில் சிரமம், நடப்பதில் சிரமம், எழுதுவதில் சிரமம், கூன்போட்டு நடப்பார்கள்.
*உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முக அமைப்பு காணப்படும்.
*இமைகள் குறைவாக  இமைக்கும்.
*ஞாபக மறதி.
*இதனால் உடலில் மெதுவாக  நரம்பு சிதைவு ஏற்படுகிறது.
*அதன்பிறகு மன அழுத்தம், கவலை, மறதி (Dementia ) டிமென்ஷியா என்னும்நினைவாற்றல் இழப்பு, குழப்பம், மனச்சோர்வு, இயக்கம் போன்றவை பாதிப்படையலாம்.

ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதன் முக்கியத்துவம்

இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் வழக்கமான வயதான அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்று மக்கள் எப்போதும் நினைக்கின்றனர். எனவே, அவர்கள் மருத்துவ உதவியை நாடுவதற்கு காலதாமதம் ஆகிவிடுகிறது.எவ்வாறாயினும், நோயின் ஆரம்ப கட்டங்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அது பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும் வரை நோயாளிகள் சிகிச்சையைத் தொடங்கவில்லை என்றால், பின் அது பலனளிக்காது. மேலும் பக்கவாதம், மூளையழற்சி, அல்சீமர் நோய் (Alzheimer) போன்ற மற்ற நோய்களின் அறிகுறிகள் இதைப்போலவே இருப்பதால், ஆரம்ப கட்டங்களில் பார்கின்சன் நோயைக் கண்டறிவது மருத்துவர்களுக்கு கடினமாக இருக்கும்.

பார்கின்சன் நோய்க்கான ஆபத்துக் காரணிகள்

வயது: இது பொதுவாக வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. நோயின் ஆரம்பம் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் தொடங்குகிறது.பரம்பரை: குடும்பத்தில் ஒருவருக்கு பார்கின்சன் நோய் இருந்தால், அது நோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எப்படியிருந்தாலும், குடும்பத்தில் உள்ள பலர் இந்நோயால் பாதிக்கப்படாத வரை, ஒருவரின் ஆபத்துகள் குறைவாகவே இருக்கும்.

பாலினம்: பெண்களை விட ஆண்களுக்கு இந்த கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.நச்சுகளின் வெளிப்பாடு: களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற நச்சுகளின் தாக்கம், பார்கின்சன் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சைகள்

*உத்வர்த்தனம் (மூலிகை பொடி மசாஜ்): அதற்கான மருந்துகள், திரிபலா சூரணம், சரக்கொன்றை சூரணம்.

*தலம் (உச்சந்தலையில் மூலிகை வைத்தல்) : அதற்கான மருந்துகளில் ஒன்றான ராஸ்னாதி சூரணத்தை நிம்பாமிர்த ஏரண்ட தைலத்துடன் கலந்து வைக்கலாம்.

*அபியங்கம்(மசாஜ்) : மருத்துவ குணமுடைய தைலங்களில், கார்பாசாஸ்த்யாதி தைலம், சகச்சராதி தைலம், மாஷ தைலம், ப்ரபஞ்சன விமர்தன தைலம் போன்றவை கொண்டு உடலை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் இருந்து  நச்சுக்களை வெளியேற்றி உடல் இயக்கங்களை மேம்படுத்தவும், நடுக்கத்தைக் குறைக்கவும், உடலை சமநிலையில் வைக்கவும் உதவும்.

*பத்ர பிண்ட ஸ்வேதனம் : மூலிகை இலைகளைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தல்.

*விரேசனம் (பேதிக்கு மருந்து கொடுத்தல்)அதற்கு சுகுமார ஏரண்ட தைலத்தை உபயோகப்படுத்தலாம்.

*பிழிச்சில்:  மூலிகை எண்ணெய்களை உடல் முழுவதும் ஊற்றுதல்.

*நஸ்ய சிகிச்சை : மூக்கில் சொட்டு மருந்து விடுதல், அதற்கு லசுண தைலத்தை பயன்படுத்தலாம்.

*வஸ்தி – என்னும்  இனிமா (Enema) கொடுத்தல்.

*சிரோவஸ்தி – தலையில் எண்ணெயை தேக்கி வைத்தல்.

யோகப் பயிற்சியின் பயன்கள்:

 

பார்கின்சன் நோய்க்கு ‘யோகா பயிற்சி’ செய்வது மூலம், நரம்புகள் வலுப்படும், நல்ல இரவு தூக்கத்தை பெற உதவும்.‘பிராணாயாமம்’ பயிற்சி எனப்படும் மூச்சுப் பயிற்சியை செய்வது உகந்தது.கம்பவாதத்திற்கு ஆயுர்வேத மருந்துகள் உள் மருந்துகள்

*மாஷா ஆத்ம குப்தாதி பால் கஷாயம்

*பூனைக்காலி விதை (கபிகச்சு பீஜ) சூரணம்

*திப்பிலி சூரணம்

*அஸ்வகந்தா சூர்ணம்- அஸ்வகந்தா சூரணத்தை ஒரு டீஸ்பூன்அளவு 100 மிலி தினமும் பாலுடன் கலந்து உட்கொள்வதின் மூலம் நரம்புகள் வலுப்படும்.

*அஷ்டவர்க்க கஷாயம்

*தனதனயனாதி கஷாயம்

*பலா அரிஷ்டம்

*அஸ்வகந்தா அரிஷ்டம்

*ரசோனாதி வடி

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப் பொருள் வெந்தயம். உணவில் வெந்தயத்தைப் பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டை தணிக்க, இதயத்தைப் பாதுகாக்க, உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க என இதன் பயன்கள் ஏராளம். எனினும் சமையலில் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்குப் பதிலாக முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட கூடுதல் பலன் கிடைக்கும். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் புரதச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன.

முளைக்கட்டுவது எப்படி?

வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளைக்கட்டியிருக்கும்.

பயன்கள்

*நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. 3 மாதங்கள் தொடர்ந்து முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும்
இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.

*வயிற்றுப் போக்கு, வயிறு வலி, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்

*நரம்புகளைப் பலப்படுத்தும். கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

*சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.

*முளைகட்டிய வெந்தயம் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் இதயக்கோளாறுகள் ஏற்படாது.

*தாய்மார்களுக்கு பால் சுரக்க முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இளம் பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.

நவதானியம் பற்றி தெரிந்து கொள்ள

http://sindinga9news.com/2022/12/05/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு

https://www.sindinga9.com/

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...